செய்திகள் :

ஆசியக் கோப்பை தொடரில் ரீ-எண்ட்ரி.! மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயஸ்!

post image

ஆசியக் கோப்பை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறவுள்ளதாக பிசிசிஐயில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் அணியில் இருந்து கலட்டிவிடப்பார். அவர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி இருந்தார்.

அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தினார். மேலும், கொல்கத்தா அணியில் இருந்து விலகி நிகழாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி அவரை ரூ. 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல்லிலும் அதிரடியைத் தொடர்ந்த ஷ்ரேயஸ், 604 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார்.

அதுமட்டுமின்றி அவர் சையத் முஸ்டாக் அலி, ரஞ்சிக் கோப்பை, இரானி கோப்பை என அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் அசத்தினார். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் கலட்டிவிடப்பட்டு, அதற்கு முழுமையான விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதன்பின் இந்திய டெஸ்ட் அணியிலும் ஷ்ரேயஸ் ஐயரை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் மறுத்து வந்தது.

ஷ்ரேயஸ் ஐயர் சர்வதேச அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில்தான், சாம்பியன் டிராபியில் தேர்வு செய்யப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர், 5 போட்டிகளில் அதிரடியாக விளையாடி 243 ரன்கள் குவித்திருந்தார்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பைத் தொடரிலும், சொந்த மண்ணில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ-யின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 10 முதல் 14 வரை தில்லியின் அருண் ஜேட்லி மைதானத்திலும் நடைபெறுகிறது.

Shreyas Iyer Likely To Be Picked For Asia Cup 2025 & West Indies Tests

இதையும் படிக்க :இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து விளையாடவிருக்கும் ஆஸ்திரேலியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சாம் சான்ஸ்டாஸ், மெக்ஸ்வீனி ஆஸி. ஏ அணியில் இடம் பிடித்துள்ளார்கள். ஆஸ்திரேலியா ஏ அணி 2 ந... மேலும் பார்க்க

கவனக்குறைவாக விளையாடுவது பேஸ்பால் தத்துவமல்ல..! கிரேக் சேப்பல் விமர்சனம்!

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் இங்கிலாந்தின் பேஸ்பால் கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியில் வென்று 2-2... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பைக்கு முன் டி20 அணிக்கு திரும்பும் ஷுப்மல் கில்! ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்!

ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்து... மேலும் பார்க்க

சிராஜுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

இந்திய வேகப் பந்துவீச்சாளர் வீரர் சிராஜ் ஓவரில் விளையாடுவது எப்போதும் சவால் மிகுந்தது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட... மேலும் பார்க்க

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

ஐசிசியின் ஜூலை மாத விருதுக்கு இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.இந்தியா - இங்கிலாந்து இடையேயான ‘ஆண்டர்சன் - டெண்டுல்... மேலும் பார்க்க