செய்திகள் :

அமெரிக்காவுக்கு பதிலடி! இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

post image

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரான் 30க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) அறிவித்துள்ளன.

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு ஈரான் - இஸ்ரேல் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒருவருக்கு பலத்த காயமும் 15 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

அவர்களில் இரண்டு குழந்தைகள் டெல் அவிவில் உள்ள இச்சிலோவ் மருத்துவ மையத்தில் சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பிற பகுதிகளிலும் சைரன்கள் ஒலித்தன, இதனால் பொதுமக்கள் ஹோம் ஃப்ரண்ட் அறிவுறுத்தலின் பேரில் பதுங்கு குழிகளுக்கு விரைந்து சென்றனர்.

இதையும் படிக்க: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்! மூன்றாம் உலகப் போரின் தொடக்கமா? உலக நாடுகள் பதற்றம்!

மிட்நைட் ஹேமர்: ஆபரேஷன் சிந்தூர் பாணியில் ஈரானில் அமெரிக்கா தாக்குதல்!

ஆபரேஷன் சிந்தூர் பாணியில் ஈரானில் அமெரிக்கா நள்ளிரவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன்... மேலும் பார்க்க

சர்வதேச விதிகளை மீறியது அமெரிக்கா: சீனா கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலின் மூலம் சர்வதேச விதிகளை அமெரிக்கா மீறியுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனத்திற்குரியது என்றும், இரு தரப்பினரும் உடன... மேலும் பார்க்க

மேற்கு ஈரானில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!

ஈரானின் மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.இன்று காலை இஸ்ரேலை நோக்கி ஈரான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன... மேலும் பார்க்க

ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார் ஈரான் வெளியுறவு அமைச்சர்

ரஷிய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷியா செல்லவுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை இஸ்தான்புல்லில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், திங்கள்கிழமை மாஸ்கோவிற்கு செல்லவிருப்பதாக ... மேலும் பார்க்க

இஸ்ரேல், செளதி பங்குச் சந்தை உயர்வு! ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமா?

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல், செளதி அரேபியாவின் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. இஸ்ரேலின் பங்குச் சந்தை குறியீடான டிஏ -35, 1.2% வரையிலும், செளதி அரேபியாவின் பங்குச் சந்தை... மேலும் பார்க்க

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவில் வீதிகளில் மக்கள் போராட்டம்

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டடம் நடத்து வருகின்றனர்.ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இரு... மேலும் பார்க்க