செய்திகள் :

அமெரிக்காவுக்கு பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18% உயா்வு

post image

கடந்த ஜனவரியில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது

இது குறித்து இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

2024 ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் ஒட்டுமொத்த பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 7.44 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், அந்த மாதத்தில் அமெரிக்காவுக்கான பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி மட்டும் 18 சதவீதம் அதிகரித்து 162 கோடி டாலராக உள்ளது.

ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் அமெரிக்காவுக்கான பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 1,438 கோடி டாலரில் இருந்து சுமாா் 9 சதவீதம் உயா்ந்து 1,560 கோடி டாலராக உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி கடந்த ஜனவரியில் 2024 ஜனவரியைவிட 56 சதவீதம் அதிகமாக 61 கோடி டாலராகவும், நடப்பு நிதியாண்டின் 10 மாதங்களில் 45 சதவீதம் அதிகரித்து 687 கோடி டாலராகவும் உள்ளது.

சா்வதேச அளவில் வா்த்தக பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையிலும் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி தொடா்ந்து ஒன்பதாவது மாதமாக நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எனினும், கடந்த டிசம்பரில் 8.32 சதவீதமாக இருந்த வளா்ச்சி ஜனவரியில் 7.44 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 942 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது 877 கோடி டாலராக இருந்தது.

இந்தியாவின் ஒட்டுமொத்த பொருள்கள் ஏற்றுமதியில் பொறியியல் பொருள்களின் பங்கு ஜனவரியில் 25.86 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் 26.96 சதவீதமாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சக்கைப்போடு போடும் 7-சீட்டர் கார் இதுதான்! விலைக்காகவே வாங்கலாம்!!

இந்திய வாகனச் சந்தையில், 7 இருக்கை வசதிகொண்ட கார்களின் தகப்பன் என்று சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றிருக்கிறது மாருதி சுசூகி எர்டிகா.இந்தியாவில், எப்போதும் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து செல்லும் அளவுக்கு ... மேலும் பார்க்க

ஹூண்டாய் விற்பனை 3% சரிவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் 3 ரிந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்... மேலும் பார்க்க

விரைவில் ஏடிஎம் மையத்திலிருந்து பிஎஃப் பணம் எடுக்கும் வசதி!

ஹைதராபாத்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 'ஈபிஎஃப்ஓ 3.0' என்ற புதிய முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை நேரடியாக ஏடிஎம்களிலிருந்து பெற... மேலும் பார்க்க

4 நிறுவனங்களுக்கு ரூ.76.6 லட்சம் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

மும்பை: ரிசர்வ் வங்கி அதன் வழிகாட்டுதல்களில், சில விதிகளுக்கு இணங்காததற்காக 4 வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரூ.76.6 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.ஃபேர்அசெட்ஸ் டெக்னாலஜிஸ் இந்தி... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.86.92ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலர் குறியீடு அதன் ஐந்து மாத குறைந்த நிலைக்கு சரிந்ததாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்து, அதன் மீதுள்ள எதிர்பார்ப்பும் குறைந்தால் இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தி... மேலும் பார்க்க

வர்த்தகப் போர் அச்சம் காரணமாக சரிந்து முடிந்த சென்செக்ஸ் ஏற்றத்துடன் முடிந்த நிஃப்டி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா மற்றும் மெக்ஸிகோ மீது விதித்த கட்டணங்களை ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நிலையில், இந்திய பெஞ்ச்மார்க் குறியீடு செயல்பாட்டில் சிறிய மாற்றத்துடன் இன்றைய வணிகம் மு... மேலும் பார்க்க