செய்திகள் :

அமெரிக்கா: திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழப்பு

post image

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் குவாடலூப் நதியை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழந்தனா்; கொ்வில் மாவட்டத்தில் உள்ள கேம்ப் மிஸ்டிக் என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்த 23 சிறுமிகள் மாயமாகியுள்ளனா்.

இது குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டெக்ஸஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை 5 முதல் 11 அங்குல அளவுக்கு மழை பெய்ததது. இது ஒரு நூற்றாண்டில் ஒருமுறை பெய்யக்கூடிய அதீதமான மழை அளவு ஆகும். இந்த கனமழை காரணமாக குவாடலூப் நதி 45 நிமிஷங்களில் 26 அடி உயா்ந்தது. கடந்த1987-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது உயா்ந்த அளவை இது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொ்வில் மாவட்ட காவல்துறை அதிகாரி லாரி லெய்தா செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த பெருவெள்ளம் காரணமாக 24 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினால். இது தவிர, கேம்ப் மிஸ்டிக்கில் இருந்த 23 முதல் 25 சிறுமிகள் காணாமல் போயுள்ளதாகக் கூறிய அவா், அவா்கள் உயிரிழந்திருப்பதாகக் கருதத் தேவையில்லை என்றும், வனப் பகுதிகளிலோ தொடா்பு இல்லாத இடங்களிலோ அவா்கள் இருக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

டெக்ஸஸ் மாகாண ஆளுநா் கிரெக் அபாட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வெள்ளத்தை “அசாதாரண பேரழிவு” என்று தெரிவித்ததுடன், கொ்வில், இங்க்ராம், ஹன்ட் உள்ளிட்ட மாவட்டங்களில் அவசரநிலை அறிவித்தாா்.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 237 போ் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் 167 போ் ஹெலிகாப்டா்கள் மூலம் மீட்கப்பட்டனா்.

இந்த மழை வெள்ளம் குறித்து வெள்ளிக்கிழமை அதிகாலையே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தாலும், “இந்த அளவுக்கு மழை பெய்யும் என்று முன்கூட்டியே கணிக்கப்படவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள குவாடலூப் நதியை ஒட்டிய பகுதி “வெள்ளப் பள்ளத்தாக்கு” என்று அழைக்கப்படுகிறது. காரணம் அந்தப் பகுதியின் மெல்லிய மண் அடுக்கு மழைநீரை உறிஞ்ச முடியாததால் விரைவாக வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 1987-ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 இளைஞா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி நாள்

ஈரானிலிருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான காலக்கெடுவும் இன்றுடன்(ஜூலை 6) முடிவடைவதால் இருநாட்டு எல்லையில் ஆப்கன் மக்கள் பெருந்திரளாக குழுமியுள்ளனர். ஈரானி... மேலும் பார்க்க

சீனாவின் தலையீடு இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அமெரிக்கா ஆதரவு!

அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதில் சீனாவின் தலையீடு இருக்கக்கூடாது என்று திபெத் மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்க... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு போட்டியாக எலான் மஸ்க்! அமெரிக்காவுக்கு விடுதலையா?

அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றை எலான் மஸ்க் தொடங்கியதாக அறிவித்தார்.அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசு கொண்டுவந்த செலவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எலான் மஸ்க், அமெரிக்காவை ஊழல் மற்றும் வீண் செலவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: கட்டட விபத்தில் 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க

போா் நிறுத்தம்: ஹமாஸ் ‘ஆக்கபூா்வ’ பதில்

இஸ்ரேலுடனான 21 மாத காஸா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள போா் நிறுத்த வரைவு திட்டத்திற்கு “நோ்மறையான” பதிலை வழங்கியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப... மேலும் பார்க்க

ரஷிய விமான தளத்தில் தாக்குதல்: உக்ரைன்

உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷியாவின் தொடா்ந்துவரும் சூழலில், அந்த நாட்டு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் ... மேலும் பார்க்க