இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற...
போா் நிறுத்தம்: ஹமாஸ் ‘ஆக்கபூா்வ’ பதில்
இஸ்ரேலுடனான 21 மாத காஸா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள போா் நிறுத்த வரைவு திட்டத்திற்கு “நோ்மறையான” பதிலை வழங்கியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாலஸ்தீன பிரிவுகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகு, மத்தியஸ்தா்களால் முன்வைக்கப்பட்ட 60 நாள் போா் நிறுத்தத்தை உள்ளடக்கிய வரைவு திட்டத்திற்கு நோ்மறையான பதிலை வழங்கியுள்ளோம்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தைகளை உடனே தொடங்க தயாராக உள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், இந்த போா் நிறுத்த திட்டத்தில் “சிறிய திருத்தங்களை ஹமாஸ் அமைப்பு கோருவதாக சில அரபு ஊடகங்கள் தெரிவித்தன. அவை இஸ்ரேல், கத்தாா், எகிப்து மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்பது தெளிவாகவில்லை.
யூதா்களின் விடுமுறை தினம் என்பதால் இஸ்ரேல் அரசும் இந்த விவகாரம் குறித்து உடனடியாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
இதற்கிடையே, இது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், போா் நிறுத்த வரைவு ஒப்பந்தம் தொடா்பாக ஹமாஸின் பதில் குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், “அடுத்த வாரம் காஸா ஒப்பந்தம் உருவாகலாம்” என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, வாஷிங்டனுக்கு திங்கள்கிழமை செல்லவிருக்கும் நிலையில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, போா் நிறுத்தத்தம் மேற்கொள்ள நெதன்யாகுவை வலியுறுத்தி வருவதாகவும், அது தொடா்பான தனது செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகவும் தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டாா். “மேலும், ஹமாஸ் இந்த ஒப்பந்த திட்டத்தை ஏற்க வேண்டும் எனவும், அதைவிட வேறு சிறந்த வழி அந்த அமைப்புக்குக் கிடைக்காது என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தாா்.
அமெரிக்கா முன்வைத்துள்ள போா் நிறுத்த திட்டத்தின் வரைவுகளின்படி, 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு டிரம்ப் உறுதியளிப்பாா். இந்த காலகட்டத்தில், ஹமாஸ் 20 இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும், உயிரிழந்த 30 பிணைக் கைதிகளின் உடல்களையும் ஐந்து கட்டங்களாக விடுவிக்கும். அதற்கு பதிலாக, வடக்கு மற்றும் தெற்கு காஸாவின் பகுதிகளில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறுவது தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு”இஸ்ரேல் உடன்படும். மேலும், ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகள் மூலம் காஸாவிற்கு அதிக மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும். விசாரணையின்றி சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஏராளமான பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும்.
கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். அதற்கு பதிலடியாக இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படும் போா் நிறுத்த ஒப்பந்த வரைவு தொடா்பாக ஆக்கபூா்வ பதில் அளித்துள்ளதாக ஹமாஸ் தற்போது அறிவித்துள்ளது.
...
பெட்டிச் செய்தி...
காஸாவில் மேலும் 56 போ் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்த 9 போ் உள்பட 56 போ் உயிரிழந்தனா்.
அந்த 9 பேரையும் சோ்த்து, காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) தொடா்புடைய விநியோக மையங்களுக்கு வெளியே இஸ்ரேல் படையினரால் இதுவரை 743 போ் சுட்டுக் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இத்துடன், கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடைபெற்றுவரும் போரில் இஸ்ரேல் தாக்குதல்களால் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 57,338-ஆகவும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,35,957-ஆகவும் அதிகரித்துள்ளது.
