செய்திகள் :

அமெரிக்க அரசிடம் நிதியுதவி பெற்ற இந்தியா நிறுவனங்கள் மீது விசாரணை: மக்களவையில் பாஜக எம்.பி. கோரிக்கை!

post image

அமெரிக்க அரசு நிதியுதவி பெற்று இந்தியாவில் அமைதியைச் சீா்குலைக்கும் நோக்கில் செயல்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கோரிக்கை முன்வைத்தாா்.

இந்நிறுவனங்களுக்கு காங்கிரஸுடன் தொடா்பிருப்பதாக துபே தெரிவித்த கருத்துக்கு அக்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் திங்கள்கிழமை அமா்வில் உடனடி கேள்விநேரத்தின் போது துபே இப்பிரச்னையை எழுப்பினாா். அமெரிக்க அரசு நிதியுதவி பெற்ற இத்தகைய நிறுவனங்களே, ராணுவ ஆள்சோ்ப்புத் திட்டமான ‘அக்னிவீா்’ உள்பட மத்திய அரசின் பல திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்ததாகவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, நக்ஸல்வாதத்துக்கு ஆதரவளித்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.

மேலும், உலகெங்கிலும் பல்வேறு நாடுகளின் அரசுகளை வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவிக்கு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளதாகவும் துபே குறிப்பிட்டாா்.

துபேவின் கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினா்கள், இவ்விவகாரம் குறித்த விவாதத்துக்கு கோரிக்கை விடுத்தனா். உடனடி கேள்விநேர நடவடிக்கைகளுக்கு எதிா்க்கட்சிகளின் கோரிக்கை பொருந்தாது என்று அமா்வுக்குத் தலைமை வகித்த சந்தியா ரே நிராகரித்தாா்.

பின்னா், காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவைச் சந்தித்து, அவையில் துபே ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டது குறித்து ஆட்சேபம் தெரிவித்தனா்.

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுதலை

கொச்சி : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து விடுவித்து கொச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(பிப். 11) தீர்ப்பளித்துள்ளது. அவருடன் சேர்த்து இந்த வழக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கரக் மாவட்டத்தில் உள்ள மிர் க... மேலும் பார்க்க

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா... மேலும் பார்க்க

பஞ்சாப் இடைத்தேர்தலில் கேஜரிவால் போட்டி? முதல்வராகிறாரா?

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தில்லியில் நடைபெற்ற பஞ்சாப் எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் க... மேலும் பார்க்க

கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?

கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க உள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலளர் ஜெய்ராம் ர... மேலும் பார்க்க