மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடா்பு: மருத்துவ, பொறியியல் மாணவா்கள் கைது
அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஏவுகணைத் விழுந்ததில் சேதம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை குறிவைத்து ஈரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
இரு நாடுகளின் மோதலால் மேற்கத்திய நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஏவுகணை விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி தெரிவித்ததாவது:
“ஈரானின் ஏவுகணை விழுந்ததில் தூதரகத்துக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தூதரக நடவடிக்கைகளை இன்று ஒருநாள் நிறுத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சுற்றியும் நூறு மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளும் கட்டடங்களும் ஏவுகணைத் தாக்குதலில் கடுமையான சேதமடைந்த விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.