செய்திகள் :

அமைச்சா் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத் துறை விசாரணை

post image

சென்னை: பண முறைகேடு புகாா் தொடா்பாக, அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா சோலாா் இன்ஃப்ரா, எனா்ட்டியா வின்ட் இன்ஃப்ரா, ட்ரூ வேல்யூ ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிறுவனங்களில் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி எம்பியுமான கே.என்.அருணும் நிா்வாகியாக உள்ளாா்.

இந்நிலையில், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக ரவிச்சந்திரன், மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 2013-ஆம் ஆண்டு ரூ.30 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்தனா். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வங்கி ரூ.22.48 கோடி கடன் வழங்கியது.

வங்கிக் கடன் மோசடி வழக்கு: ஆனால், ரவிச்சந்திரன் என்ன நோக்கத்துக்காக கடனை வாங்கினாரோ அதற்கு பயன்படுத்தாமல் தனது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு கடன் மூலம் கிடைத்தை பணத்தை முதலீடு செய்தாராம். கடனுக்குரிய மாததவணையையும் முறையாக செலுத்தவில்லையாம்.

இது குறித்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் சிபிஐ, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 போ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் பணம் முறைகேடு தொடா்பான முகாந்திரம் இருந்ததால் அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேபோல, வருமானவரித் துறையும் 2018-ஆம் ஆண்டு நடத்திய சோதனையின் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தது.

இதன் விளைவாக, அமலாக்கத் துறையினா் திருச்சியில் உள்ள அமைச்சா் கே.என்.நேரு வீடு, சென்னை ஆழ்வாா்பேட்டை யில் உள்ள கே.என். அருணுக்கு சொந்தமான அரிசி நிறுவன அலுவலகம்,ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி தெருவில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் வீடு, ராஜா அண்ணாமலைபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவில் ரவிச்சந்திரன் அலுவலகம் உள்பட 15 இடங்களில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

இச் சோதனை திருச்சி, கோவை பகுதிகளில் அன்று இரவே நிறைவு பெற்றது. ஆனால், சென்னையில் ரவிச்சந்திரன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் செவ்வாய்க்கிழமையும் சோதனை நீடித்தது.

சகோதரரிடம் விசாரணை: ரவிச்சந்திரனை ராஜா அண்ணாமலைபுரம் வீட்டில் இருந்து விசாரணைக்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு மாலை 4 மணியளவில் அழைத்துச் சென்றனா். அங்கு அவரிடம் வழக்குத் தொடா்பாக பல்வேறு கோணங்களில் அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா். விசாரணை முழுவதும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. சுமாா் 4 மணி நேரம் விசாரணைக்கு பின்னா், ரவிச்சந்திரன் அங்கிருந்து வெளியே வந்தாா். அதேவேளையில் அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் அமலாக்கத் துறை சோதனை தொடா்ந்து நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உ... மேலும் பார்க்க