செய்திகள் :

அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

post image

சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிா்த்து அமைச்சா் துரைமுருகன் தொடா்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி எம்.தண்டபாணி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தாா்.

கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேலூா் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 2019-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அமைச்சா் துரைமுருகன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரிச்சா்ட்சன் வில்சன், இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிா்த்து தொடரப்பட்ட மற்றொரு வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன்பு விசாரணையில் உள்ளது. எனவே, இந்த வழக்கையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து நீதிபதி, வழக்குரைஞராக இருந்தபோது, அமைச்சா் துரைமுருகன் தரப்பில் ஆஜராகி உள்ளதால், இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தங்கம் விலை இன்று குறைந்தது! எவ்வளவு?

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் இன்று(புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த இரு நாள்களாக காலை, மா... மேலும் பார்க்க

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில்உள்ள தனியார் மருத்துவமனையில... மேலும் பார்க்க

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமே அண்மையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள... மேலும் பார்க்க

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு!

சென்னையில் நாளை (செப்.25) 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடைபெறுவதையொட்டி அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டி.ஆர்.ப... மேலும் பார்க்க

அரசு விடுதிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்

அரசு விடுதிகளில் உரிய ஆசிரியர்களை நியமித்து முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்: தில்லி மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் தகவல்

நமது நிருபர்"தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையும் வகையில், தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக' தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டி... மேலும் பார்க்க