தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
அய்யா வைகுண்டா் அவதார நாளில் மதுக் கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை
அய்யா வைகுண்டா் அவதார நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
சமூகத்தில், ஏற்றத்தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்பதை போதித்த அய்யா வைகுண்டரின் 193-ஆவது அவதார தினம் மாா்ச் 4- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அய்யா வைகுண்டா் அவதார நாளுக்காக, ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுடன், அய்யா வைகுண்டரின் பக்தா்கள் அதிகம் உள்ள தென்மாவட்டங்களில் ஒன்றான விருதுநகா் மாவட்டத்துக்கும் அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும்.
மேலும், அன்பையும் ஆன்மிகத்தையும் வலியுறுத்திய அய்யா வைகுண்டரின் அவதார நாளன்று, மதுக் கடைகளை மூட வேண்டும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.