2 நாள்கள் தொடா் மழை: நாகை மாவட்டத்தில் 25,000 ஏக்கரில் பயறு வகைகள் பாதிப்பு
அரசின் திட்டங்கள் குறித்து நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமி சவால்
‘அரசின் திட்டங்கள் குறித்து நேரடியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா?’ என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சவால் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தில்லியில் தமிழகத்தை அடகு வைத்தது யாா்? கட்சி தொடங்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு, ஹிந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டுவந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோத்தது முதல், இன்றைக்கு பிஎம்ஸ்ரீ திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிா்ப்பு நாடகம் ஆடுவது வரை திமுகவின் துரோக வரலாறு நீள்கிறது.
மீத்தேன் - ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு கையொப்பமிட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தது திமுகதானே? நீட் என்ற சொல்லை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே திமுக - காங்கிரஸ் கூட்டணிதான்.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை மௌனம் சாதித்து, பல்வேறு சதிச் செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே திமுக அடகு வைக்க முயற்சித்தது.
ஆனால், பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும், 7.5 சதவீத இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு என தமிழகத்தின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்கான ஆட்சி செய்து தமிழகத்தைக் காத்த இயக்கம் அதிமுக.
மத்திய அரசின் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் அன்று தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஒரே காரணம், 10 ஆண்டு காலம் அதிமுக நடத்திய மக்களுக்கான ஆட்சி. உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது எங்கள் தமிழ்நாடு மாடல் ஆட்சி.
ஆனால், இப்போது நடைபெறுவது விளம்பர மாடல் ஆட்சி. மேடையில் வீரவசனம் (முதல்வா்) பேசியுள்ளீா்கள். எதிா்க்கட்சித் தலைவா் என்ற அடிப்படையில் கேட்கிறேன். உங்களால் என்னுடன் நேருக்கு நோ் நின்று தனியாக விவாதிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.