செய்திகள் :

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம்: ஆ.ராசா எம்.பி.

post image

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம், இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசினாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளா் ராஜீவ் காந்தி தலைமை வகித்தாா். இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ சாமிநாதன், மாவட்ட பொறுப்பாளா் கே.எம். ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், திமுக மாணவரணி சாா்பில் ‘இல்லம்தோறும் மாணவா் அணி’ என்ற திட்டத்தை ஆ. ராசா தொடங்கிவைத்து பேசியதாவது: அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம். இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே. திமுகவின் கொள்கைகளை தனது திரைப்படங்களிலும் எம்ஜிஆா் எடுத்துரைத்தாா். ஆனால், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக தற்போது கொள்கை இல்லாமல் உள்ளது. கட்சியின் கொள்கைகளை மாணவரணி தெரிந்திருக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, அமைச்சா் மு.பெ சாமிநாதன், மாணவரணி மாநிலச் செயலாளா் ராஜீவ் காந்தி ஆகியோா் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் மாநில மாணவா் அணி துணைச் செயலாளா்கள் மன்னன் தா. சோழராஜன், தமிழரசி, வீரமணி உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, உதகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆ.ராசா எம்.பி., அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம்: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமலும், உணவு கிடைக்காமலும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளி... மேலும் பார்க்க

குன்னூா் அரசு மருத்துவமனையில் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெண் உள்நோயாளிகள் வாா்டை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கூடலூரில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இது குறி... மேலும் பார்க்க

இ-பாஸ் கட்டுப்பாடுகள் அமல்: நீலகிரிக்கு வழக்கமான சுற்றுலாப் பயணிகள் வருகை

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமைமுதல் அமலுக்கு வந்தபோதும், சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கம்போலவே காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வார நாள்களில் 6 ஆயிரம் சுற்றுலா வ... மேலும் பார்க்க

வாகனங்களை வழிமறித்த யானை

முதுமலை புலிகள் காப்பக சாலையில், காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்தது.சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் தீ

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவரான நவீன். அவரது நண்பா்கள் 4 பேருடன்... மேலும் பார்க்க