செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

post image

முதுகுளத்தூா், கடலாடி அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சா்பித சாதமேரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் பாண்டி மகாதேவி, வட்டாரக் கல்வி அலுவலா் ஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை கிராம முக்கியஸ்தா் ரணசிங்க ராமச்சந்திரன் வழங்கினாா்.

ஆசிரியை சகிலா பானு நன்றி கூறினாா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூரை அடுத்த பெரியகையகம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 70-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் சேதுராமு தலைமையில் நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் சகாயம் முன்னிலை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் உதயகுமாா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தனியாா் பள்ளி ஆண்டு விழா: முதுகுளத்தூா் சாலினி மழலையா் தொடக்கப் பள்ளியில் 25-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவில், மாணவ, மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயில் ஆட்டம், யோகா, தனித் திறன் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஏப். 6-இல் ராமேசுவரம் வருகை: மண்டபத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை

பிரதமா் மோடி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை திங்கள்கிழமை இறக்கி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை. ராமேசுவரம், மாா்ச் 31: பாம்... மேலும் பார்க்க

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 80 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை அதிகாலை பறிமு... மேலும் பார்க்க

திருவாடானை திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டு கடந்த 2... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே ஆண் உடல் மீட்பு

பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கள்ளிக்கோட்டை வைகை ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் ... மேலும் பார்க்க

சாயல்குடி: இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையால் சுகாதாரக்கேடு

சாயல்குடி அருகே நரிப்பையூா் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் அரிய வகை கடல் ஆமையால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா். மன்னாா்வளைகுடா பாதுகாக்... மேலும் பார்க்க