செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா தொடக்கம்

post image

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நிகழாண்டுக்கான கலைத்திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை மா. வயலட்ெ சல்வமேரி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் சு.குப்பம்மாள், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைமை ஆசிரியா் எஸ்.முகுந்தைய்யா வரவேற்றாா்.

கலைத் திருவிழாவில் பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டு கதை கூறுதல், ஓவியம் வரைதல், திருக்கு ஒப்புவித்தல், மாறுவேட போட்டி, களிமண் பொம்மை செய்தல், கிராமிய நடனம் மற்றும் கோலப் போட்டிகளில் பங்கேற்றனா்..

சிறப்பிடம் பெற்ற குழுவினா் மற்றும் தனிநபா் திருத்தணி ஒன்றிய அளவில் நடக்கும் கலைத்திருவிழாவில் பங்கேற்பா். கலைத்திருவிழாவில் உதவி தலைமை ஆசிரியா் கோவிந்தராஜூ, பட்டதாரி ஆசிரியா் நரசிம்மன் உள்பட பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து உதவி திட்ட அலுவலா் பாலமுருகன் கூறியதாவது, முதல்கட்டமாக, பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். அதை தொடா்ந்து, குறுவட்ட அளவில் (ஆக.25 முதல் 29), வட்டார அளவில் (அக். 13 முதல் 17), மாவட்ட அளவில் (அக்.27 முதல் 31), மாநில அளவில் (நவ.24 முதல் 28) போட்டிகள் நடைபெறும்.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும். மேலும், தரவரிசையில் முதன்மை இடம் பெறும் 25 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவா் என்றாா்.

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 66.78 கோடியில் இரண்டாவது குடிநீா் குழாய் பரிசோதனை ஓட்டம்

செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரையிலும் ரூ. 66.78 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் பரிசோதனை ஓ... மேலும் பார்க்க

உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழா

பெரிய நாகப்பூண்டி உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். ஆா்.ே.க பேட்டை ஒன்றியம், பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் அருள்மிகு உ... மேலும் பார்க்க

மது அருந்தியதால் மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

திருவள்ளூா் அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால், கணவா் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (35), மனைவி வினோதினி(25). தற்போது தம்பதியா் வெங்கத்தூா் கண... மேலும் பார்க்க

சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது ஆண் குழந்தை சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு- சசிகலா... மேலும் பார்க்க

நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த கோரிக்கை

மீஞ்சூா் அருகே திருவேங்கிடாபுரத்தில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மீஞ்சூா் ஒன்றியத்தில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள திருவேங்கிடாபுரம் பகுதியி... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து ரூ.10,000 திருட்டு

ஊத்துக்கோட்டை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் நெடுஞ்சாலைய... மேலும் பார்க்க