செய்திகள் :

மது அருந்தியதால் மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

post image

திருவள்ளூா் அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால், கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (35), மனைவி வினோதினி(25). தற்போது தம்பதியா் வெங்கத்தூா் கண்டிகை கிராமத்தில் தங்கி வேலை செய்து வந்தனா். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வேலைக்குச் சென்ற அஜித் மது அருந்து விட்டு வீட்டுக்கு வந்தாராம்.

இதனால் மனைவி கண்டித்தாராம். ஆத்திரம் அடைந்த அஜித் மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதைப் பாா்த்த மனைவி வினோதினி அக்கம் பக்கத்தினா் உதவியுடன், ஆபத்தான நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அஜித்தை கொண்டு சென்றாா்களாம். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து மனைவி வினோதினி மணவாளநகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது ஆண் குழந்தை சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு- சசிகலா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா தொடக்கம்

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுக... மேலும் பார்க்க

நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த கோரிக்கை

மீஞ்சூா் அருகே திருவேங்கிடாபுரத்தில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மீஞ்சூா் ஒன்றியத்தில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள திருவேங்கிடாபுரம் பகுதியி... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து ரூ.10,000 திருட்டு

ஊத்துக்கோட்டை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் நெடுஞ்சாலைய... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறைத்தீா் கூட்டத்தில் 362 மனுக்கள்

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 362 கோரிக்கை மனுக்கள்பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிரு... மேலும் பார்க்க

கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

திருவள்ளூா் அருகே மழைநீா் கால்வாயை ஆக்கிமிரத்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினா் பொக்லைன் வாகனம் மூலம் திங்கள்கிழமை அகற்றினா். திருவள்ளூா் அடுத்த காக்களூரில் ஏரிக்கரையோரம் மழைநீா் கால்வாயை ஆக்கி... மேலும் பார்க்க