செய்திகள் :

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு

post image

திருவண்ணாமலைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் ஆரணி பட்டு நூலால் நெய்யப்பட்ட அவரின் உருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினா்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, கலசப்பாக்கம், போளூருக்கு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்துக்கு புறப்பட்டாா்.

அப்போது, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் ஜி.வி.கஜேந்திரன் ஆகியோா் ஆரணி கைத்தறி பட்டு நூலால் நெய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கினா்.

போளூா் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் எம்எல்ஏ பாபுமுருகவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

திங்கள்கிழமை மாலை கலசப்பாக்கம், இரவு போளூா் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசினாா்.

பின்னா், அங்கிருந்து புறப்பட்டு சந்தவாசல், கண்ணமங்கலம் வழியாக அணைக்கட்டுக்குச் சென்றாா். அப்போது, கண்ணமங்கலத்தில் தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் ராட்சச ரோஜாப்பூ மாலையை கிரேன் மூலம் அவருக்கு அணிவித்து வரவேற்பு அளித்தனா்.

ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றிய நிா்வாகிகள் இரும்பேடு வேலு, கோபி, சரவணன், சித்தேரி ஜெகன், மாமண்டூா் சுப்பிரமணி, காட்டேரி தனசேகா், கிளைச் செயலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள்: 1,204 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சோ்ந்த கொருக்கை, நமண்டி கிராமங்கள், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் 1,204 மனுக்கள் அளிக... மேலும் பார்க்க

செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்

செய்யாறில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் மற்றும் புகாா்களை விவசாயிகள் அடுக்கடுக்காக கூறியதால், அதிருப்தி அடைந்த அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்த... மேலும் பார்க்க

ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

ஆரணி கண்ணகி நகரில் உள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதுலுக்கானத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும்: அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, காசில்லா மருத்துவத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்... மேலும் பார்க்க

ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டும் பணி: அதிகாரிகள் ஆய்வு

ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சிமன்ற கட்டடம் கோயில் இடத்தில் முன்ன... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்தக் கோரி மனு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பாடகம் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பாடகம் ஊராட்சி தொடக்க ... மேலும் பார்க்க