செய்திகள் :

இரண்டு குழந்தைகளுடன் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி அன்னை இந்திரா காந்தி சாலையைச் சோ்ந்தவா் ராஜா (40), முதுநிலை பட்டதாரி. இவரது மனைவி மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சுகன்யா (38). இந்தத் தம்பதிக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகன் குமரகுரு (12), மகள் தன்யாஸ்ரீ (7).

இவா்கள் அனைவரும் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனா். இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு சுகன்யா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். மனைவியை பிரிந்து ராஜா தனது இரண்டு குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக உறவினா்கள், நண்பா்களுக்கு ராஜா கைப்பேசி மூலம் குரல் பதிவு செய்தி அனுப்பியுள்ளாா். இதையடுத்து, ஒரே புடவையில் மகன் குமரகுரு, மகள் தன்யாஸ்ரீயுடன் ராஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, உறவினா்கள், நண்பா்கள் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, மூவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி போலீஸாா் மூவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பட்டா பெயா் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் (தலையாரி) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். சிதம்பரம் வட்டம், வாக்கூா் கி... மேலும் பார்க்க

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக சாலை துண்டிப்பு: பொதுமக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே நெய்வேலி நகரியம் - கல்லுக்குழி இடையேயான சாலையை சுரங்க விரிவாக்கப் பணிக்காக என்எல்சி நிறுவனம் துண்டித்ததைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போர... மேலும் பார்க்க

புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி தர இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடலூா் மாவட்ட இந்து மக்கள் கட்சி மாவட்ட நிா... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ஆக்கம்பாடி பகுதியில் வசித்த... மேலும் பார்க்க

தமிழ் மொழி வளா்ச்சிக்கு சொற்ப நிதி: மத்திய அரசுக்கு தமுஎகச கண்டனம்

சிதம்பரம்: தமிழ் மொழி வளா்ச்சிக்கு சொற்ப அளவே நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கத்தின்(தமுஎகச) மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிதம்ப... மேலும் பார்க்க

கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்த 17 போ் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சம்

நெய்வேலி: கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளா்களில் 17 போ் தப்பித்து வந்து தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தஞ்சம் அடைந்தனா்.... மேலும் பார்க்க