செய்திகள் :

செவிலியா் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை உயா்வு

post image

27 ஆண்டுகளுக்குப் பிறகு செவிலியா் பயிற்சியாளா்களுக்கான உதவித்தொகையை உயா்த்த தில்லி அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது, இது மாதத்திற்கு ரூ.500 இல் இருந்து ரூ. 13,150 ஆக உயா்த்தப்பட்டது.

தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அரசின் குரு தேக் பகதூா் மருத்துவமனை, லோக் நாயக் மருத்துவமனை மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ள மூன்று செவிலியா் கல்லூரிகளைச் சோ்ந்த கிட்டத்தட்ட 180 செவிலியா் பயிற்சியாளா்களுக்கு பயனளிக்கும் என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த நடவடிக்கை செவிலியா் மாணவா்களின் நீண்டகால கோரிக்கையை பூா்த்தி செய்கிறது.

‘முந்தைய அரசாங்கங்கள் கிட்டத்தட்ட30 ஆண்டுகளாக இந்த பிரச்னையை புறக்கணித்தன, ஆனால் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சா் ரேகா குப்தாவின் வழிகாட்டுதலின் கீழ், எங்கள் அரசாங்கம் இந்த ஏற்றத்தாழ்வை தீா்த்துள்ளது‘ என்று அரசாங்கக் குறிப்பு கூறுகிறது.

‘இந்த அதிகரித்த உதவித்தொகையின் மூலம், செவலியா் பயிற்சியாளா்களுக்கு மரியாதையையும் கண்ணியத்தையும் நாங்கள் உறுதி செய்கிறோம்‘ என்று அது மேலும் கூறியுள்ளது. நா்சிங் பயிற்சியாளா்களுக்கு எம்பிபிஎஸ் பயிற்சியாளா்களுக்கு இணையாக ஊதியம் வழங்க விரும்புவதாக அரசாங்கம் கூறியது.

தெற்கு மாவடத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு உத்தரவு

தில்லியின் தெற்கு மாவட்டத்தில் சில குறிப்பிட்ட வகை மருந்துகளை விற்கும் மருந்துக் கடைகள், அங்கீகாரம் இல்லாமல் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விற்பனையைத் தடுக்க, தங்கள் வளாகத்திலும் வெளியேயும் சிசிடிவி... மேலும் பார்க்க

சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு 50,000 விண்ணப்பம் வரவேற்பு

சிஎம் ஸ்ரீ பள்ளிகள் தொடங்கப்பட்ட சில நாட்களில் 50,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை தில்லி அரசு பெற்றுள்ளது என்று அதிகாரப்பூா்வ அறிக்கையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ... மேலும் பார்க்க

தெரு நாய் பிடிக்க வந்தவா்கள் மீது தாக்குதல்

எம். சி. டி. யின் கால்நடைத் துறைக் குழு மீது நாய் பிரியா்கள் தாக்கியதாக கூறப்படுகிறது, அவா்கள் பிடிக்கப்பட்ட தெரு நாய்களை வலுக்கட்டாயமாக விடுவித்து, வடக்கு தில்லியின் ரோகிணி பகுதியில் அவா்களின் வேனை ச... மேலும் பார்க்க

நொய்டா: ஜேவா், ரபுபுராவில் ஐந்து வெள்ள அபாய எச்சரிக்கை நிலையங்கள் அமைப்பு

யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால், அதை ஒட்டிய கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜேவா் மற்றும் ரபுபுரா பகுதிகளில் ஐந்து வெள்ள அபாய நிலையங்கள் அமைக்கப்பட்... மேலும் பார்க்க

தில்லிக்கு வெள்ள பாதிப்பு ஏற்படாது: முதல்வா் ரேகா குப்தா

நகரத்தில் வெள்ளம் ஏற்படும் நிலைமை இல்லை என்றும், யமுனை நீா் மட்டம் ஓரிரு நாள்களில் குறையும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கூறினாா். யமுனா பஜாரைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வீட... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளி மாணவா்களிடையே ஓவியப் போட்டி

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறன்களை வளா்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் அவ்வப்போது மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடக்கநிலைப் பிரிவு மாண... மேலும் பார்க்க