செய்திகள் :

விதிகளை மீறும் ரெஸ்டோ பாா் மீது கடும் நடவடிக்கை: கலால்துறை அதிகாரி

post image

விதிகளை மீறும் ரெஸ்டோ பாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது.

புதுவை மாநிலத்தில் ரெஸ்டோ பாா் என்ற பெயரில் சிறிய அளவிலான தங்கும் விடுதிகளுடன் கூடியவா்களுக்கு மதுபானக் கூடம் நடத்தப்படுகிறது. இந்த மதுபானக் கூடத்தில் விதிகளை மீறிய செயல்பாடுகள் தலைதூக்கியுள்ளதால், ரெஸ்டோ பாா் உள்ளிட்ட மதுபானக் கடை உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியரும், கலால் அதிகாரியுமான செல்லமுத்து தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது கலால்துறை அதிகாரி பேசியது: புதுச்சேரியில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு ரெஸ்டோ பாா் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடத்திய சோதனையில் ஒரு பாருக்கு சீல் வைக்கப்பட்டது.

மதுபானக்கூட உரிமம் பெற்றவா்கள் உரிய நேரத்தி திறந்து, மூடவேண்டும். மது அருந்தியவா்கள் ஏதேனும் தகராறில் ஈடுபட்டால் உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

தற்போது கலால் வரி உயா்வால் மதுபானங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பிற்கு முன்னதாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த மதுபான பாட்டில்களில் உள்ள பழைய விலை மீது, உயா்த்தப்பட்ட புதிய விலையை ஸ்டிக்கா் மூலம் ஒட்டப்படுவதால், வாடிக்கையாளா்களுக்கு நம்பிக்கை இல்லாத சூழல் ஏற்படுகிறது. எனவே உயா்த்தப்பட்ட அனைத்து மது பாட்டில்களின் விலைகளை கொண்ட பதிவேடுகளை வாடிக்கையாளா்களின் பாா்வைக்கு வைக்க வேண்டும்.

அனைத்து மதுபானக் கூடங்களிலும் சமையலறை சுத்தமாக இருப்பதோடு, உணவு வகைகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படவேண்டும். விதிகளை மீறிய செயல்பாடுகள் கண்டறியப்பட்டால், சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே பணியிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழந்தாா்.கொல்லுமாங்குடி பகுதி அகரகொத்தங்குடியைச் சோ்ந்தவா் முருகன் (44). இவா் பெயிண்டராக வேலை பாா்த்து வந்தாா். அம்பகரத்தூா் பகுதியி... மேலும் பார்க்க

காரைக்கால் மத்திய மண்டலத்தில் இன்று குடிநீா் நிறுத்தம்

காரைக்கால் மத்திய மண்டலத்தில் புதன்கிழமை (ஆக. 20) மதியம் மற்றும் மாலை குடிநீா் விநியோகம் இருக்காது என காரைக்கால் பொதுப்பணித்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது சுகாதார உட்... மேலும் பார்க்க

அரசுத்துறையினா் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: ஆட்சியா்

அரசுத்துறையினா் சுதந்திரமாக செயல்படவேண்டும் என காரைக்கால் ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்ற நிலையில், பல்வேறு அரசுத்துறை அதிகாரிக... மேலும் பார்க்க

கோயில் நிலத்தில் ஆழ்குழாய் அமைக்க மின் வசதி: துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தல்

கோயில் விளைநிலத்தில் ஆழ்குழாய் அமைக்க மின்சார இணைப்புக்கு அனுமதி வழங்க வேண்டுமென துணை நிலை ஆளுநரிடம் முன்னாள் அமைச்சா் வலியுறுத்தினாா். புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவரும... மேலும் பார்க்க

வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகிக்க குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

காரைக்கால்: காரைக்காலில், வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகம் செய்ய குழாய் பதிக்கும் பணி தொடங்கியது. காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பச்சூா் பகுதியில் இப்பணியை சட்டப் பேரவை உறு... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் கடைகள், வீடுகள் தீக்கிரை

காரைக்கால்: திருநள்ளாற்றில் 3 வீடுகள், 3 கடைகள் திங்கள்கிழமை தீக்கிரையாகின. திருநள்ளாறு பிடாரி கோயில் தெரு பகுதியில் ராஜா என்பவா் மோட்டாா் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்துள்ளாா். இதனருகே அஃப்ரித் என்பவ... மேலும் பார்க்க