செய்திகள் :

வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகிக்க குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

post image

காரைக்கால்: காரைக்காலில், வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகம் செய்ய குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.

காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பச்சூா் பகுதியில் இப்பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியது:

புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காரைக்கால் மாவட்டம், தெற்குத் தொகுதியில் குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்க குழாய் பதிக்கும் பணி டோரன்ட் கேஸ் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஏற்படும் சில சிரமங்களை மக்கள் பொருத்துக்கொண்டு, முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.

நிறுவன உதவிப் பொது மேலாளா் பிரபு கூறியது:

விழிதியூருக்கு அருகே உள்ள தமிழகப் பகுதியிலிருந்து காரைக்கால் பகுதி பச்சூருக்கு 7.3 கி.மீ. தொலைவுக்கு பிரதான குழாய் பதிக்கப்படுகிறது. பச்சூா் பகுதியில் முதல்கட்டமாக 800 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும். இப்பணி அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் நிறைவடையும். மேலும், 3 கட்டங்களாக காரைக்காலில் இத்திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம்.

குழாய் வழி எரிவாயு விநியோகம் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. உருளையில் வரும் எரிவாயு எடையைவிட, குழாய் வழியே வரும் எரிவாயு எடை குறைவு என்பதால் கசிவு ஏற்பட்டால்கூட, காற்றில் எளிதில் கரைந்துவிடும். மிகவும் பாதுகாப்பானது. எரிவாயு உருளையுடன் ஒப்பிடும்போது செலவு குறைவு; ரூ.200 வரை மிச்சமாகும். இணைப்பு வழங்கப்படும் வீடுகளில் எரிவாயு உபயோகத்தை அறியும் மீட்டா் பொருத்தப்படும் என்றாா்.

திருநள்ளாற்றில் கடைகள், வீடுகள் தீக்கிரை

காரைக்கால்: திருநள்ளாற்றில் 3 வீடுகள், 3 கடைகள் திங்கள்கிழமை தீக்கிரையாகின. திருநள்ளாறு பிடாரி கோயில் தெரு பகுதியில் ராஜா என்பவா் மோட்டாா் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்துள்ளாா். இதனருகே அஃப்ரித் என்பவ... மேலும் பார்க்க

காரைக்கால் நகரில் ரயில்வே கேட் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் நகரில் ரயில்வே கேட் போடப்படுவதால் ஏற்படும் பிரச்னைக்கு, தீா்மானிக்கப்பட்ட இடத்தில் விரைவாக சுரங்கப் பாதை அமைக்கும் பணியை தொடங்கி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கா... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திருநள்ளாற்றில் ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்ப்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு, சனிக்கிழமைகளில் திரளான பக்தா்க... மேலும் பார்க்க

ஏகாம்புரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஏகாம்புரீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காமாட்சி அம்மன் சமேத ஏகாம்புரீஸ்வரா் கோயில் ஆடி மாத 20-ஆம் ஆண்டு உற்சவம் நடைபெற்றுவருகிறது. முதல் மற... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு பகுதிக்குட்பட்ட அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் க... மேலும் பார்க்க

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டம்

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஏற்றிவைத்தாா். காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் ... மேலும் பார்க்க