செய்திகள் :

ஏகாம்புரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

post image

திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஏகாம்புரீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காமாட்சி அம்மன் சமேத ஏகாம்புரீஸ்வரா் கோயில் ஆடி மாத 20-ஆம் ஆண்டு உற்சவம் நடைபெற்றுவருகிறது. முதல் மற்றும் 2 -ஆவது வெள்ளிக்கிழமை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 3-ஆவது வெள்ளிக்கிழமை திருவிளக்கு வழிபாடும், 4-ஆவது வெள்ளிக்கிழமை பால் மற்றும் பழக்காவடி புறப்பாடு நடைபெற்று சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான 15-ஆம் தேதி காலை சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்துக்கான சடங்குகளாக மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுடன் சிவாச்சாரியா் அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்து மகா தீபாராதனை காட்டினாா். ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இரவு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு பகுதிக்குட்பட்ட அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் க... மேலும் பார்க்க

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டம்

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஏற்றிவைத்தாா். காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் ... மேலும் பார்க்க

மக்கள் அனுமதிக்காததால்தான் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது: ஓஎன்ஜிசி தலைமை அதிகாரி

காவிரி படுகையில் எண்ணெய், எரிவாயு உற்பத்தி குறைவுக்கு மக்கள் ஒத்துழைப்பு தராததுதான் காரணம் என ஓஎன்ஜிசி செயல் இயக்குநா் மற்றும் காவிரி அசெட் மேலாளா் உதய் பாஸ்வான் கூறினாா். நிரவி பகுதியில் உள்ள ஓஎன்ஜி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

காரைக்கால் அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையத்தை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் திறந்துவைத்தாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சா... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு புதுவை முதல்வா், சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகம் மூலம் அரசுப் பள்ளியில் மாலை நேர வகுப்பு தொடக்கம்

பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களின் திறனை மேம்படுத்தும் விதமாக, காரைக்கால் துறைமுகம் சாா்பில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. காரைக்கால் போா்ட் பிரைவேட் லிமிடெட், அதானி அறக்கட்டளை சமூக பொற... மேலும் பார்க்க