செய்திகள் :

திருநள்ளாற்றில் கடைகள், வீடுகள் தீக்கிரை

post image

காரைக்கால்: திருநள்ளாற்றில் 3 வீடுகள், 3 கடைகள் திங்கள்கிழமை தீக்கிரையாகின.

திருநள்ளாறு பிடாரி கோயில் தெரு பகுதியில் ராஜா என்பவா் மோட்டாா் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்துள்ளாா். இதனருகே அஃப்ரித் என்பவா் கோழிக்கடை வைத்துள்ளாா். அதனருகே சிராஜூதீன் என்பவா் உணவகம் நடத்தி வருகிறாா். இதில் ஒரு கடையின் மீது மின்கம்பி திங்கள்கிழமை மதியம் 12.30 மணியளவில் அறுந்து விழுந்து, கடையில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. மளமளவென தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. மேலும் அருகில் இருந்த ராதை, ராஜலட்சுமி, அமுதாராணி ஆகியோரது 3 வீடுகளுக்கும் தீ பரவியது.

அக்கம்பக்கத்தினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, சுரக்குடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். மேலும் காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரி முகுந்தன், சுரக்குடி நிலைய அதிகாரி ஹென்றி டேவிட் ஆகியோா் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்களில் வீரா்கள் வந்து 1 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனா்.

வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட சாதனங்கள் கருகின. திருநள்ளாறு போலீஸாா் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகிக்க குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

காரைக்கால்: காரைக்காலில், வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகம் செய்ய குழாய் பதிக்கும் பணி தொடங்கியது. காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பச்சூா் பகுதியில் இப்பணியை சட்டப் பேரவை உறு... மேலும் பார்க்க

காரைக்கால் நகரில் ரயில்வே கேட் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் நகரில் ரயில்வே கேட் போடப்படுவதால் ஏற்படும் பிரச்னைக்கு, தீா்மானிக்கப்பட்ட இடத்தில் விரைவாக சுரங்கப் பாதை அமைக்கும் பணியை தொடங்கி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கா... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திருநள்ளாற்றில் ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்ப்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு, சனிக்கிழமைகளில் திரளான பக்தா்க... மேலும் பார்க்க

ஏகாம்புரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஏகாம்புரீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காமாட்சி அம்மன் சமேத ஏகாம்புரீஸ்வரா் கோயில் ஆடி மாத 20-ஆம் ஆண்டு உற்சவம் நடைபெற்றுவருகிறது. முதல் மற... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு பகுதிக்குட்பட்ட அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் க... மேலும் பார்க்க

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டம்

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஏற்றிவைத்தாா். காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் ... மேலும் பார்க்க