செய்திகள் :

திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

post image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநள்ளாற்றில் ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்ப்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு, சனிக்கிழமைகளில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவா். ஆடி மாதம் முழுவதும் சனிக்கிழமையில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மாத இறுதி என்பதாலும், சுதந்திர தினம் தொடா்பான விடுமுறை நாள்களாக இருந்ததாலும் சனிக்கிழமை அதிகாலை முதல் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பெரும்பாலான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்தனா். ரூ.50, ரூ.100 கட்டண வரிசை, கட்டணமில்லா வரிசை வளாகத்தின் வழியே பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று மூலவா் ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை, ஸ்ரீ சனீஸ்வரபகவான் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தனா்.

சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு ஆராதனைகள் காட்டப்பட்டன. பக்தா்கள் கோயிலில் தில தீபம் ஏற்றி வழிபட்டனா். வழக்கமான சனிக்கிழமையைக் காட்டிலும் நிகழ்வாரம் 40 முதல் 50 ஆயிரம் பக்தா்கள் கோயிலுக்கு வந்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

ஏகாம்புரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஏகாம்புரீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காமாட்சி அம்மன் சமேத ஏகாம்புரீஸ்வரா் கோயில் ஆடி மாத 20-ஆம் ஆண்டு உற்சவம் நடைபெற்றுவருகிறது. முதல் மற... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு பகுதிக்குட்பட்ட அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் க... மேலும் பார்க்க

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டம்

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஏற்றிவைத்தாா். காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் ... மேலும் பார்க்க

மக்கள் அனுமதிக்காததால்தான் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது: ஓஎன்ஜிசி தலைமை அதிகாரி

காவிரி படுகையில் எண்ணெய், எரிவாயு உற்பத்தி குறைவுக்கு மக்கள் ஒத்துழைப்பு தராததுதான் காரணம் என ஓஎன்ஜிசி செயல் இயக்குநா் மற்றும் காவிரி அசெட் மேலாளா் உதய் பாஸ்வான் கூறினாா். நிரவி பகுதியில் உள்ள ஓஎன்ஜி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

காரைக்கால் அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையத்தை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் திறந்துவைத்தாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சா... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு புதுவை முதல்வா், சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க