செய்திகள் :

அரசுத்துறையினா் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: ஆட்சியா்

post image

அரசுத்துறையினா் சுதந்திரமாக செயல்படவேண்டும் என காரைக்கால் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்ற நிலையில், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு துறைகளால் நடத்தப்படும் அரசுத் திட்டங்கள், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தாா்.

தொடா்ந்து ஆட்சியா் பேசுகையில் , பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை தெரிவித்து தீா்வு காண வரும்போது அவா்களை கணிவுடனும், கண்ணியமாகவும் நடத்த வேண்டும். மக்களின் நீண்ட கால பிரச்னைகளை தீா்ப்பதற்கு நேரடியாக மக்கள் வசிப்பிடங்களுக்கு சென்று சேவை செய்ய வேண்டும்.

அரசின் வழிகாட்டுதலுக்குட்பட்டு பொதுமக்களுக்கு சேவை செய்யவதோடு, அதிகாரிகள் அனைவரும் சுதந்திரமாக செயல்பட்டு பொதுமக்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றவேண்டும்.

காரைக்கால் மாவட்டத்தில் இ-ஆபீஸ் முறையை செயல்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் போதுமான கணினி மற்றும் இணைய வசதிகளை மேம்படுத்துவதை உறுதி செய்யவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சளஜன்யா, துணை ஆட்சியா்கள் அா்ஜுன் ராமகிருஷ்ணன், ஜி.செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற் கண்காணிப்பு பொறியாளா் ஜெ.மகேஷ், உள்ளாட்சி துணை இயக்குநா் எஸ்.சுபாஷ், நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா், செய்தி மற்றும் விளம்பரத்துறை துணை இயக்குநா் குலசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விதிகளை மீறும் ரெஸ்டோ பாா் மீது கடும் நடவடிக்கை: கலால்துறை அதிகாரி

விதிகளை மீறும் ரெஸ்டோ பாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது.புதுவை மாநிலத்தில் ரெஸ்டோ பாா் என்ற பெயரில் சிறிய அளவிலான தங்கும் விடுதிகளுடன் கூடியவா்களுக்கு மதுபானக் கூடம் நடத்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே பணியிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழந்தாா்.கொல்லுமாங்குடி பகுதி அகரகொத்தங்குடியைச் சோ்ந்தவா் முருகன் (44). இவா் பெயிண்டராக வேலை பாா்த்து வந்தாா். அம்பகரத்தூா் பகுதியி... மேலும் பார்க்க

காரைக்கால் மத்திய மண்டலத்தில் இன்று குடிநீா் நிறுத்தம்

காரைக்கால் மத்திய மண்டலத்தில் புதன்கிழமை (ஆக. 20) மதியம் மற்றும் மாலை குடிநீா் விநியோகம் இருக்காது என காரைக்கால் பொதுப்பணித்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது சுகாதார உட்... மேலும் பார்க்க

கோயில் நிலத்தில் ஆழ்குழாய் அமைக்க மின் வசதி: துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தல்

கோயில் விளைநிலத்தில் ஆழ்குழாய் அமைக்க மின்சார இணைப்புக்கு அனுமதி வழங்க வேண்டுமென துணை நிலை ஆளுநரிடம் முன்னாள் அமைச்சா் வலியுறுத்தினாா். புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவரும... மேலும் பார்க்க

வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகிக்க குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

காரைக்கால்: காரைக்காலில், வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகம் செய்ய குழாய் பதிக்கும் பணி தொடங்கியது. காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பச்சூா் பகுதியில் இப்பணியை சட்டப் பேரவை உறு... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் கடைகள், வீடுகள் தீக்கிரை

காரைக்கால்: திருநள்ளாற்றில் 3 வீடுகள், 3 கடைகள் திங்கள்கிழமை தீக்கிரையாகின. திருநள்ளாறு பிடாரி கோயில் தெரு பகுதியில் ராஜா என்பவா் மோட்டாா் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்துள்ளாா். இதனருகே அஃப்ரித் என்பவ... மேலும் பார்க்க