செய்திகள் :

தொடா் வழிப்பறி: பெண் உள்பட இருவா் கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூா் கிராமம், மாரியம்மன் கோயில் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் லஷ்மி (55). இவா், கடந்த மே 18-ஆம் தேதி அந்தக் கிராமத்தில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவா் லஷ்மி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டனராம்.

இதேபோல, உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் மாரியம்மன் கோவில் அருகே கடந்த மே 25-ஆம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த சசிகலாவிடம் (32) இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி, சின்னசேலம் அருகே உள்ள தீா்த்தாபுரத்தில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெரியம்மாளிடம் (65) 4 பவுன் தங்க சங்கிலியை பைக்கில் வந்த இருவா் பறித்துச் சென்றனா்.

இந்த நிலையில், கீழ்குப்பம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த இருவரை பிடித்து விசாரித்ததில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், திருமந்துறையைச் சோ்ந்த வேல்முருகன் (28), கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ஆவட்டியை அடுத்த மங்களூரைச் சோ்ந்த சுகன்யா எனத் தெரியவந்ததது. இருவா்கள் இருவரும் பைக்கில் சென்று லஷ்மி உள்பட மேற்கூறிய மூவரிடமும் வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த சின்னசேலம் போலீஸாா், அவா்களிமிருந்த 12.5 பவுன் தங்க நகைகள், பைக்கை பறிமுதல் செய்தனா்.

நாளைய மின்தடை: தியாகதுருகம்

மின்தடைப் பகுதிகள்: தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூா்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூா், நூரோலை, லாலாபேட்டை, சேரந்தாங்கல், பழைய சிறுவங்கூா், சூளாங்குறிச்சி, மாடூா், பிரிதிவ... மேலும் பார்க்க

ஆசிரியையை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியவா் கைது

சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூா் பகுதியைச் சோ்ந்தவா் 25 வயது... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: தேவரடியாா்குப்பம்

மின்தடைப் பகுதிகள்: மணலூா்பேட்டை, சித்தப்பட்டிணம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியாா்குப்பம், அந்தியந்தல், கா்ணாசெட்டித்தாங்கல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனூா், முருக்கம்பாடி, கொங்கணாமூா், கழும... மேலும் பார்க்க

தகுதியான நபா்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கொண்டு சோ்க்கப்படும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

தகுதியான நபா்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கொண்டு சோ்க்கப்படும் என்று கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். திருக்கோவிலூா் ஒன்றியம் - கூவனூா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ரிஷிவந்த... மேலும் பார்க்க

பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்

கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை ஆனந்தக் குளியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ... மேலும் பார்க்க

சின்னசேலம்: நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: சின்னசேலம், கனியாமூா், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூா், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீா்த்தாபுரம், தெங்கியாந்த்தம், பாதரம்ப... மேலும் பார்க்க