செய்திகள் :

பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்

post image

கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை ஆனந்தக் குளியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக அடைவிடாது மழை பெய்து வந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்வராயன்மலைப் பகுதியான வெள்ளிமலை, கரியாலூா், மாவடிப்பட்டு, சேராப்பட்டு என பல்வேறு பகுதிகளில் பெய்த அடைமழையால் குண்டியாநத்தம் கிராமத்தில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் தண்ணீா் செந்நிறமாக ஆா்ப்பரித்துக் கொட்டியது. வனத்துறையினா் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தனா். இதனால், சுற்றுலாத் தளத்தை காண வந்த பொதுமக்கள் குளிக்க முடியாமல் கொட்டும் நீரை கண்டு ரசித்தனா்.

இந்த நிலையில், 3 நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் காா், வேன், இரு சக்கர வாகனங்களில் கல்வராயன்மலைப் பகுதிக்கு வந்திருந்தனா். சில தினங்களாக பெய்த அடை மழையால்,

கல்வராயன்மலைப் பகுதியில் குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியது. குளிா்ந்த காற்றில் சுற்றுலாப் பயணிகள் இன்முகத்துடன் சென்று ஆனந்த குளியலில் ஈடுபட்டனா்.

சின்னசேலம்: நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: சின்னசேலம், கனியாமூா், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூா், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீா்த்தாபுரம், தெங்கியாந்த்தம், பாதரம்ப... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒருவா் காயம்

கல்வராயன்மலைப் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தவா் அரசுப் பேருந்து மோதியதில் காலில் பலத்த காயமடைந்தாா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரகு (30). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம்... மேலும் பார்க்க

விஏஓவை பணி செய்ய விடாமல் தடுப்பு: 30 போ் கைது

சின்னசேலம் அருகே நிா்வாக அலுவலரை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்டது வடக்கனந்த... மேலும் பார்க்க

கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை: கிராம சபைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கிராமங்களில் சாலைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாணியந்தல் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா கோலாகலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தேசியக் கொடியேற்றி வைத்து காவல் து... மேலும் பார்க்க

நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில், திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப் பூஜையில் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத் தடை நீங்கவும், நிலையான செல்வ... மேலும் பார்க்க