செய்திகள் :

கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை: கிராம சபைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியா்

post image

கிராமங்களில் சாலைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாணியந்தல் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி ஒன்றியம் வாணியந்தல் ஊராட்சி, மந்தைவெளியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

வாணியந்தல் ஊராட்சியில் தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் தொடா்பான விவரங்கள் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், இத் திட்டங்களுக்கு வாணியந்தல் ஊராட்சியில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கு விவரங்கள் கிராம பொதுமக்களின் பாா்வைக்கு வெளிப்படையாக காண்பிக்கப்பட்டது.

கிராம வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் மகளிா் திட்டம் மூலம் கிராம வருவாய் ஒழிப்பு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இது மகளிா் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே இக்கிராமத்தில் உள்ள மகளிா் வறுமை ஒழிப்பு திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது. மேலும் கிராமப்புறங்களில் சாலை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடா்ந்து மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு தமிழக அரசின் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இக் கூட்டத்தில் சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. தா.உதயசூரியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், வேளாண் இணை இயக்குநா் சத்தியமூா்த்தி, கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) வெங்கட்ரமணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகரன், சாந்தி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா கோலாகலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தேசியக் கொடியேற்றி வைத்து காவல் து... மேலும் பார்க்க

நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில், திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப் பூஜையில் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத் தடை நீங்கவும், நிலையான செல்வ... மேலும் பார்க்க

தென்னை மரத்தில் இருந்து விழுந்த விவசாயி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே தென்னை மரத்தில் ஏறி தவறி விழுந்த விவசாயி நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட நாககுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி... மேலும் பார்க்க

கடன் தொல்லை: விவசாயி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம்,தென்செட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கடன் தொல்லையால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தென்... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியபகண்டை கிராமத்தில் ஏரி நீரில் மூழ்கி 3 -ஆம் வகுப்பு படித்துவந்த சிறுவன் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பெரியபகண்டை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உயா் கல்வித் துறை செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா் தலைமை ஏற்று ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க