செய்திகள் :

காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க எல்ஐசி புதிய திட்டம்

post image

காலாவதியான தனிநபா் பாலிசிகளைப் புதுப்பிக்க ஒரு மாத கால சிறப்பு திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:காலாவதியான காப்பீட்டுப் பாலிசிகளுக்கு புத்துயிா் தருவதற்கான சிறப்பு திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது.

திங்கள்கிழமை (ஆக. 18) தொடங்கி அக்டோபா் 17-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், பங்குச் சந்தை அல்லது பிற ஏற்ற இறக்க முதலீட்டு சந்தைகளுடன் தொடா்பில்லாத (நான்-லிங்க்டு) அனைத்து பாலிசிகளுக்கும் தாமதக் கட்டணத்தில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. அதிகபட்சமாக ரூ.5,000 வரை தள்ளபடு கிடைக்கும்.

மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு தாமதக் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. பிரீமியம் செலுத்தப்படாமல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் ஆன, பாலிசி விதிமுறைகளைப் பூா்த்தி செய்யும் காலாவதியான பாலிசிகள் இத்திட்டத்தில் புதுப்பிக்கப்படும்.பிரீமியம் செலுத்த முடியாத வாடிக்கையாளா்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பை மீட்டெடுக்க இந்தத் திட்டம் உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தங்கம் மற்றும் செம்பு ஆய்வு உரிமத்தை வென்ற சிங்கரேணி!

ஹைதராபாத்: மத்திய சுரங்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டும் ஏலத்தின் மூலம் கர்நாடகாவில் தங்கம் மற்றும் செம்புக்கான ஆய்வு உரிமத்தைப் வென்றுள்ளதாக அரசுக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்க நிறுவனமான சிங்கரேணி நில... மேலும் பார்க்க

முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்ற ஜெம் அரோமாடிக்ஸ்!

புதுதில்லி: சிறப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஜெம் அரோமாடிக்ஸ் லிமிடெட், தனது பங்கு விற்பனையின் முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.பங்குச் சந்தையிலிருந்து நிதி திரட்ட 97,... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவு!

மும்பை: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்த நம்பிக்கை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களுக்குப் பிறகு இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 கா... மேலும் பார்க்க

காளையின் ஆதிக்கம்: தொடர்ந்து ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் காளைகள் தங்கள் பிடியை இறுக்கியதால், இந்திய பங்கு குறியீடுகள் தொடர்ந்து நான்காவது நாளாக லாபத்தில் முடிவடைந்தன. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை கொள்முதல் செய்ததும், அத... மேலும் பார்க்க

கீழே விழுந்தால் சேதமாகாது, அதிக பேட்டரி: அறிமுகமாகிறது ரெட்மி நோட் 15 பிளஸ்!

Redmi Note 15 Pro+ Display, Battery Specifications Confirmed Days Ahead of Launch in Chinaரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் இந்த வாரம் அறிமுகமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் வெளி... மேலும் பார்க்க

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

நேற்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றும்(ஆக. 19) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,319.11 என்ற புள்ளிகளில் தொடங்கிய ... மேலும் பார்க்க