செய்திகள் :

கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம்: மக்களவையில் மத்திய அமைச்சர் விமர்சனம்

post image

நமது நிருபர்

பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விமர்சித்தார்.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய வேளாண் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அளித்த பதில்:

தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு வீடுகளைக் கட்ட மத்திய அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஆனால், ஒரு வருடத்திற்கும் மேலாகியும் தமிழக அரசு பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 2 லட்சத்து முதல் 15 ஆயிரம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

மத்திய அரசு பணம் தருகிறது. தமிழக அரசு வீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை. இது ஏழைகளுக்கு எதிரான அநீதி, ஏமாற்றுதல், பாவமாகும்.

இது மட்டுமல்லாமல், 3 லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. பணம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அரசாங்கம் வீடுகளைக் கட்டி முடிக்கவில்லை.

தமிழக அரசின் கணக்கில் ரூ.608 கோடி உள்ளது. மத்திய அரசின் பங்கு ரூ.608 கோடியாகும்.

2018-ஆம் ஆண்டிற்கான "ஆவாஸ் யோஜனா' பட்டியலில் 50,815 வீடுகள் என்ற இலக்கை தமிழ்நாட்டிற்கு எட்ட முடியவில்லை.

ஏழைகளுக்கு வீடுகள் கட்டினால் அவர்களுக்கு என்ன பிரச்னை? பிரதமர் மோடியின் பெயர் இருக்கும் என்பதால் அவர்கள் வீடுகள் கட்ட அனுமதிக்கவில்லை.

மேற்கூரை இல்லாத வீடுகளுடைய ஏழைகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான கணக்கெடுப்பை நிகழாண்டு தமிழக அரசு செய்யவில்லை என்றார் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி போட்டி

நமது சிறப்பு நிருபர்குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் "இண்டி' கூட்டணியும் பரஸ்பரம் தென் மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிவித... மேலும் பார்க்க

மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

நமது நிருபர்மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம், குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத... மேலும் பார்க்க

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது அ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: நாளை கூட்டத்தொடா் நிறைவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் அமளி நீடித்தது. பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறி... மேலும் பார்க்க

தொடா்மழையால் வெள்ளக்காடான மகாராஷ்டிரம்: 8 போ் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோா் மீட்பு

மகாராஷ்டிரத்தில் இடைவிடாது பெய்துவரும் தொடா்மழையால் கடந்த இரண்டு நாள்களில் 8 போ் உயிரிழந்தனா். மாநிலம் முழுவதும் பரவலாக வெள்ளம், நிலச்சரிவுகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் என பலத்த சேதங்கள் ஏற்பட்... மேலும் பார்க்க