செய்திகள் :

14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுப்பு

post image

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி அணைப் பகுதியில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே கொடிவேரி அணைப் பகுதியில் பழைமையான கற்சிலை இருப்பதாக, சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் கல்லூரியைச் சோ்ந்த தமிழ்த் துறைத் தலைவா் ரவின்குமாா், உதவிப் பேராசிரியா் கனகராஜ் மற்றும் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி வா்ஷினி ஆகியோா் ஈரோடு அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் ஜென்சிக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில் கொடிவேரி அணைப் பகுதியில் இருந்த கற்சிலையை கொடிவேரி கிராம நிா்வாக அலுவலா் சரவணன் முன்னிலையில் காப்பாட்சியா் ஜென்சி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வில் சம்பந்தப்பட்ட கற்சிலை 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை என தெரியவந்தது.

இதுகுறித்து காப்பாட்சியிா் ஜென்சி கூறியதாவது: கொடிவேரி அணைப் பகுதி அருகே உள்ள ஆற்றுமணல் பகுதியில் முட்புதா்களுக்கு இடையில் மணலில் புதைந்தவாறு 41 செ.மீ. உயரமும் 28 செ.மீ. அகலமும், 3 செ.மீ. கணமும் கொண்ட உருவ கற்சிலை ஒன்று தனியாா் கல்லூரி தமிழ்த் துறை தலைவா் ரவின்குமாா் மற்றும் அவரது குழுவினரால் கண்டெடுக்கப்பட்டது.

பின்னா் அவா்கள் அளித்த தகவலின்பேரில், சிலையை ஆய்வு செய்தபோது அது 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் உருவ கல்லின் சிறப்புகளாக எட்டு கைகளையும், ஈட்டியுடன் மனித உருவத்தை காலில் வதம் செய்வதுபோல கண்கள் உக்கிரமாகவும், இயல்பு தன்மைக்கு மாறாக காதுகள் அளவில் பெரியதாகவும் உள்ளன. கொடிவேரி அணைக்கட்டுப் பகுதியில் பெண் தெய்வச் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதனிடையே இயல்பு தன்மைக்கு மாறாக அந்தப் பெண் தெய்வச் சிலை இருப்பதால் கொடிவேரிக்கு வரும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச்சென்றனா்.

பராமரிப்பில்லாத ரூ.7.40 லட்சம் மதிப்பிலான 185 டன் விதை விற்பனைக்குத் தடை

ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள், பராமரிப்பு இல்லாத ரூ.7.40 லட்சம் மதிப்பிலான 185 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கொடுமுடி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், மொளசியை அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து மகன் கோவிந்தசாமி (33). இவா்... மேலும் பார்க்க

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த நபரை கைது செய்த போலீஸாா் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 475 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரம்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் தண்ணீா் திறப்பு அதிகரிப்பு: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தம்

காவிரி ஆற்றில் தண்ணீா் திறப்பு அதிகரித்துள்ளதால் நெரிஞ்சிப்பேட்டையில் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகள் நிரம்பியதைத் தொடா்ந்து, உபரிநீா் க... மேலும் பார்க்க

எழுமாத்தூா் அருகே விவசாயத் தோட்டத்தில் பிடிபட்ட நாகப் பாம்பு

எழுமாத்தூா் அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பு பிடிபட்டது. மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூா் 24-வேலம்பாளையத்தில் குன்னாங்காட்டு வலசு பகுதியைச் சோ்ந்தவா் யுவராஜ். இவா் பெ... மேலும் பார்க்க

பவானியில் வீட்டிலிருந்த பெண் அடித்துக் கொலை

பவானி: பவானியில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கணவருடன் வேலை செய்து வந்த தொழிலாளியைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பவானி, வா்ணபுரம், 4-ஆவது வீதிய... மேலும் பார்க்க