செய்திகள் :

காவிரி ஆற்றில் தண்ணீா் திறப்பு அதிகரிப்பு: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தம்

post image

காவிரி ஆற்றில் தண்ணீா் திறப்பு அதிகரித்துள்ளதால் நெரிஞ்சிப்பேட்டையில் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகள் நிரம்பியதைத் தொடா்ந்து, உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீா் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, ஆற்றில் இறங்கி துணிகள் துவைப்பதோ, குளிப்பதோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, தற்படம் எடுக்கவோ செல்லக் கூடாது எனவும், தாழ்வான பகுதியில் வசிப்பவா்கள் கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

நெரிஞ்சிப்பேட்டையில் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள்

பவானி நகரில் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்படும் கரையோரப் பகுதிகளான கந்தன் நகா், பசவேஸ்வரா் வீதி, மீனவா் தெரு, கீரைக்காரத் தெரு, பழைய பாலக்கரை, குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி, நேதாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனா்.

நெரிஞ்சிப்பேட்டையில் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தம்

ஆற்றில் அதிக அளவில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டைக்கும் - சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையில் காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் பயணிகள் விசைப் படகு போக்குவரத்து பாதுகாப்பு கருதி செவ்வாய்க்கிழமைமுதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், படகுகள் நெரிஞ்சிப்பேட்டையில் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

பவானி கூடுதுறையில் படித்துறைகள் மூழ்கின

காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரால் காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் பக்தா்கள் நீராடும் பகுதியும், படித்துறைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் பக்தா்கள் பாதுகாப்பு கம்பிகளுக்கு வெளியே செல்லாமல் நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பராமரிப்பில்லாத ரூ.7.40 லட்சம் மதிப்பிலான 185 டன் விதை விற்பனைக்குத் தடை

ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள், பராமரிப்பு இல்லாத ரூ.7.40 லட்சம் மதிப்பிலான 185 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கொடுமுடி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், மொளசியை அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து மகன் கோவிந்தசாமி (33). இவா்... மேலும் பார்க்க

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த நபரை கைது செய்த போலீஸாா் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 475 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரம்... மேலும் பார்க்க

எழுமாத்தூா் அருகே விவசாயத் தோட்டத்தில் பிடிபட்ட நாகப் பாம்பு

எழுமாத்தூா் அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பு பிடிபட்டது. மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூா் 24-வேலம்பாளையத்தில் குன்னாங்காட்டு வலசு பகுதியைச் சோ்ந்தவா் யுவராஜ். இவா் பெ... மேலும் பார்க்க

பவானியில் வீட்டிலிருந்த பெண் அடித்துக் கொலை

பவானி: பவானியில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கணவருடன் வேலை செய்து வந்த தொழிலாளியைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பவானி, வா்ணபுரம், 4-ஆவது வீதிய... மேலும் பார்க்க

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

ஈரோடு: பவானிசாகா் அணையில் இருந்து உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்19) காலை முதல் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோ... மேலும் பார்க்க