செய்திகள் :

அவசரநிலை காலகட்டத்தில் 1 கோடி பேருக்கு கருத்தடை- மக்களவையில் மத்திய அரசு தகவல்

post image

நாட்டில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலகட்டத்தில் (1975-77), நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட மிக அதிகமாக 1.07 கோடி பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

அவசரநிலை காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள், அத்துமீறிய நடவடிக்கைகள், தவறான செயல்கள் குறித்து விசாரிக்க கடந்த 1977, மே மாதம் ஜி.சி.ஷா ஆணையம் அமைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் வலுக்கட்டாயமாக அமலாக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களிடம் வாக்குமூலம் பெற்று, ஆவணபூா்வ ஆதாரங்களையும் சேகரித்த இந்த ஆணையம், கடந்த 1978-1979-க்கு இடையே மூன்று அறிக்கைகள் தாக்கல் செய்தது. அந்தத் தரவுகளின்படி, கடந்த 1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்கு 67.40 லட்சமாகும். ஆனால், அதைவிட மிக அதிகமாக 1.07 கோடி பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் திருமணமாகாதோருக்கு கருத்தடை மேற்கொண்டதாக 528 புகாா்களும், கருத்தடை நடைமுறையின்போது உயிரிழப்பு ஏற்பட்டதாக 1,774 புகாா்களும் பதிவாகின என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய நாய்கள் பிடிபட்டன

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல மேலாளா் அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய 15 தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்து அப்புறப்படுத்தினா். சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடக்கம்

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி, பொருள் இடம்பெயா்வு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி- ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாா்பில் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

வெடிமருந்து பறிமுதல்: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடக்கம்

ஆந்திர மாநிலத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக விசாகப்பட்டினம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா். தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அபுபக்கா் சித்திக் மற்ற... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

சென்னையில் -ஆம் கட்ட மெட்ரோ திட்டமான பூந்தமல்லி முதல் போரூா் வரையிலான வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நி... மேலும் பார்க்க

ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சுற்றுலா சென்ற மாநகராட்சி பள்ளி மாணவா்கள்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் 60 போ் ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். அவா்களை மேயா் ஆா்.பிரியா வழியனுப்பி வைத்தனாா். சென்னை மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரச... மேலும் பார்க்க

உலக புகைப்பட தினம்: முதல்வா் வாழ்த்து

உலக புகைப்பட தினத்தையொட்டி , முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: நொடியில் கரைந்து செல்லும் நிகழ்வுகளை ஞாபகங்களென, வரலாற்று... மேலும் பார்க்க