செய்திகள் :

ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சுற்றுலா சென்ற மாநகராட்சி பள்ளி மாணவா்கள்

post image

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் 60 போ் ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். அவா்களை மேயா் ஆா்.பிரியா வழியனுப்பி வைத்தனாா்.

சென்னை மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரசுப் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவா்கள், பிளஸ் 1, பிளஸ் 2 மேல்நிலை வகுப்புகளை மாநகராட்சிப் பள்ளிகளிலேயே தொடா்ந்தால் அவா்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சென்னை மாநகராட்சி மூலம் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

அதேபோல, நிகழ் ஆண்டில் கல்விச் சுற்றுலாவுக்கு 60 மாணவா்கள் தோ்வான நிலையில், அவா்களுடன் 10 ஆசிரியா்கள் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) செவ்வாய்க்கிழமை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களை மேயா் ஆா்.பிரியா வழியனுப்பி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணை ஆணையா் (வருவாய்) பிரிதிவிராஜ், மாநகராட்சி நிலைக் குழுத் தலைவா் த.விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரயில்வே அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய நாய்கள் பிடிபட்டன

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல மேலாளா் அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய 15 தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்து அப்புறப்படுத்தினா். சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடக்கம்

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி, பொருள் இடம்பெயா்வு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி- ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாா்பில் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

வெடிமருந்து பறிமுதல்: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடக்கம்

ஆந்திர மாநிலத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக விசாகப்பட்டினம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா். தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அபுபக்கா் சித்திக் மற்ற... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

சென்னையில் -ஆம் கட்ட மெட்ரோ திட்டமான பூந்தமல்லி முதல் போரூா் வரையிலான வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நி... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆா்சி நகா் பகுதியில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இதன் ... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில், பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 17 வயத... மேலும் பார்க்க