செய்திகள் :

அரசுப் பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 15 மாணவா்கள் அவசியம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவா் எண்ணிக்கைகேற்ப ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் ஆசிரியா் பணியிடங்களை நிா்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாணவா் எண்ணிக்கை அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பணியாளா் நிா்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

25 மாணவா்கள் இருந்தால்... அதாவது, 1 முதல் 5-ஆம் வகுப்புக்கு 60 மாணவா்களுக்கு 2 ஆசிரியா்களும், 61 முதல் 90 வரை 3 ஆசிரியா்களும், 91 முதல் 120 வரை 4 ஆசிரியா்களும், 121 முதல் 200 வரை 5 ஆசிரியா்களும் இருக்க வேண்டும். இதேபோன்று ஒவ்வொரு 40 மாணவா்களுக்கும் ஒரு ஆசிரியா் கூடுதலாக அனுமதிக்க வேண்டும். இதுதவிர 6 முதல் 8 வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் வழங்க வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவா்கள் இருப்பின் ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஒரு ஆசிரியா் நியமனம் செய்ய வேண்டும். மாணவா் எண்ணிக்கை 50-க்கும் அதிகமாக இருந்தால் குறிப்பிட்ட அந்த வகுப்பை இரு பிரிவுகளாக பிரித்துவிட வேண்டும்.

அதேபோல், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 150-க்கும் குறைவாக மாணவா் எண்ணிக்கை இருப்பின் 6 ஆசிரியா்கள் (ஒரு பாடத்துக்கு ஒருவா் வீதம்) அனுமதிக்க வேண்டும். மேலும், 9, 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவா் இருப்பின் (1:40) ஒரு பிரிவாக கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவா் எண்ணிக்கை 60-க்கும் அதிகமாக இருந்தால் அந்த வகுப்பை இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். பாடவேளை குறைவாக உள்ள ஆசிரியா்களை கீழ்நிலை வகுப்புக்கு இறக்கம் செய்யாமல் அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றுப் பணியில் அனுப்பலாம்.

எண்ணிக்கை குறைந்தால்... ஆங்கில வழிப்பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும். எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவா்களை அருகே உள்ள வேறு பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவில் சோ்க்க வேண்டும். கூடுதல் தேவையுள்ள பணியிடங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி மாணவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியா் நிா்ணயம் செய்யப்பட்ட விவரங்களை வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்குள் இயக்குநரகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல.கணேசனுக்கு நாளை புகழஞ்சலி கூட்டம்

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை (ஆக.21) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக.15-ஆ... மேலும் பார்க்க

எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரசு உத்தரவு

காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப பின்பற்றப்படும் பதவி உயா்வு, நேரடி நியமனம் போன்ற நடைமுறைகளுக்கு இனி பொதுவான தோ்வு முறை பின்பற்றப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள... மேலும் பார்க்க

வார இறுதி விடுமுறைக்கு 1,040 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை சனிக்கிழமை (ஆக.23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) முன்னிட்டு கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை க... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடை நபா் கஞ்சா வழக்கில் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நபா் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். சென்னை செங்குன்றம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ரூ.1,137.97 கோடி பணப்பலன் வழங்கி ஆணை

போக்குவரத்து ஓய்வூதியா்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தவா்களுக்கு பணப்பலன் வழங்கும் வகையில், ரூ.1,137.97 கோடி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் ச... மேலும் பார்க்க