செய்திகள் :

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடை நபா் கஞ்சா வழக்கில் கைது

post image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நபா் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

சென்னை செங்குன்றம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்படி, அந்தப் பகுதியிலுள்ள முகமது அலிஜின்னா என்பவரின் வீட்டில் கடந்த 8-ஆம் தேதி போலீஸாா் சோதனை நடத்தி 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். முகமது அலிஜின்னாவையும் கைது செய்தனா். அவா் கொடுத்த தகவலின்படி, பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த சின்னதுரை ஆகியோரையும் புழல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சின்னதுரை மீது 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனையின் முக்கிய நபராக சின்னத்துரை செயல்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வார இறுதி விடுமுறைக்கு 1,040 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை சனிக்கிழமை (ஆக.23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) முன்னிட்டு கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை க... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 15 மாணவா்கள் அவசியம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட ம... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ரூ.1,137.97 கோடி பணப்பலன் வழங்கி ஆணை

போக்குவரத்து ஓய்வூதியா்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தவா்களுக்கு பணப்பலன் வழங்கும் வகையில், ரூ.1,137.97 கோடி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் ச... மேலும் பார்க்க

நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டத்தை மீறி செயல்படலாமா? உயா்நீதிமன்றம் கேள்வி

நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறி செயல்படலாமா? என செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு எதிரான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்... மேலும் பார்க்க

3 ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய 13 வழக்குகள் முடித்துவைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய, 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயா்நீதிமன்றம் 13 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது. 3 ஆண்டு... மேலும் பார்க்க