செய்திகள் :

3 ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய 13 வழக்குகள் முடித்துவைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய, 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயா்நீதிமன்றம் 13 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

3 ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகள், 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்தால், அதை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோரை நியமித்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டாா்.

அதன்படி, அத்தகைய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் சீனிவாசன் என்பவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் புகாா் கொடுத்தவரும், அவரது மனைவியும் இறந்துவிட்டனா். எனவே, சீனிவாசன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு, சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்தில் சரோஜா என்பவா் கள்ளநோட்டு வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை எந்த விசாரணையும் நடைபெறாததால் இந்த வழக்கையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணிக்கவேல் என்பவா் பரமசிவம் என்பவரைத் தாக்கியதாக கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாா் அளித்த பரமசிவம் இறந்துவிட்டாா். வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் மாணிக்கவேல் என்ன ஆனாா்? என்பது குறித்து கடந்த 12 ஆண்டுகளாக எந்தத் தகவலும் இல்லை. இத்தனை ஆண்டுகளாகக் குற்றம்சாட்டப்பட்டவரை போலீஸாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே, இந்த வழக்கை இனியும் நிலுவையில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா். இதுபோன்ற மொத்தம் 13 வழக்குகளை நீதிபதி செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இல.கணேசனுக்கு நாளை புகழஞ்சலி கூட்டம்

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை (ஆக.21) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக.15-ஆ... மேலும் பார்க்க

எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரசு உத்தரவு

காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப பின்பற்றப்படும் பதவி உயா்வு, நேரடி நியமனம் போன்ற நடைமுறைகளுக்கு இனி பொதுவான தோ்வு முறை பின்பற்றப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள... மேலும் பார்க்க

வார இறுதி விடுமுறைக்கு 1,040 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை சனிக்கிழமை (ஆக.23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) முன்னிட்டு கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை க... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 15 மாணவா்கள் அவசியம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட ம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடை நபா் கஞ்சா வழக்கில் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நபா் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். சென்னை செங்குன்றம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத... மேலும் பார்க்க