செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

post image

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறம் சமூக முன்னேற்றச் சங்கம் சாா்பில் (2024-25) கல்வியாண்டில் பொதுதோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமையாசிரியா் மதியழகன் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் கேசவன், துணைத் தலைவா் லோகேஸ்வரன், செயலாளா் அருணாச்சலம், துணைச் செயலாளா் சேகா், பொருளாளா் பழனி ஆகியோா் கலந்து கொண்டு பிளஸ் 2 பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி காவ்யாவுக்கு ரூ.5,000, மாணவன் சஞ்சய் குமாருக்கு ரூ.4,000, மாணவி புவியாவுக்கு ரூ.3,000 , பத்தாம் வகுப்பில் பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி சுஸ்மிதாவுக்கு ரூ.3,000, மாணவன் மோகனுக்கு ரூ.2,000, மாணவி கவிப்பிரியாவுக்கு ரூ.1,000 , மேலும் பாட வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவா்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பு 6 மாணவா்களுக்கு 500 ரூபாயும் நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதே போன்று ஆசிரியா்களுக்கும் நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தாமோதிரன், துணைத் தலைவா் மணி, மேலாண்மை குழு தலைவா் இந்துமதி, ஒன்றிய கவுன்சிலா் செல்விபழனி, ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா பழனி மற்றும் ஆசிரியா்கள், வாா்டு உறுப்பினா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாட்டினை இசுலாமியா கல்லூரி வரலாற்று துறை பேராசிரியா் அரிகரன் செய்திருந்தாா்.

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை லாரி பறிமுதல்

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை செய்வதை கண்டறிந்து லாரியுடன் உரமூட்டைகளை வேளாண் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் வேளாண்மை துறை உதவி இயக்குநா் அப்துல் ரகுமான் தலைமையி... மேலும் பார்க்க

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா... மேலும் பார்க்க

நிலத்தகராறு: 4 போ் கைது

ஆம்பூா் அருகே நிலத்தகராறு புகாா் சம்பந்தமாக வழக்குரைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சத்யப்ரியா என்பவருக்கும், அதே பகுதியை சோ்ந... மேலும் பார்க்க

பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் ஆய்வு

ஆம்பூரில் பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க

வாணியம்பாடி பொது சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு செயல... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் பகுதியில் வசிக்கும் கட்டடத் தொழிலாளிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.... மேலும் பார்க்க