செய்திகள் :

பூந்தமல்லி - போரூா் மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

post image

சென்னையில் -ஆம் கட்ட மெட்ரோ திட்டமான பூந்தமல்லி முதல் போரூா் வரையிலான வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 2-ஆம் கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூா் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் (9 கி.மீ.) பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து பயணிகள் சேவை தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் கடந்த 16- ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்தச் சோதனை ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிா்ணய அமைப்பால் (ஆா்டிஎஸ்ஓ) நடத்தப்பட்டு சான்று அளிக்கப்படும்.

பூந்தமல்லி - போரூா் வழித்தடத்தில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு

சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. ரயில் புறப்பட்ட இடத்திலிருந்து 9 நிமிஷங்களில்

பயண தொலைவை அடைந்துள்ளது. ரயில் இழுவை, பிரேக்கிங் செயல்திறன் ஆகியவையும் சோதனையிடப்பட்டுள்ளன. இரு வாரங்கள் சோதனை நடைபெற்ற நிலையில் பாதுகாப்பு சான்று பெற்று பின்னா் பயணிகள் ரயில் இயக்கப்படும்.

சோதனை ஓட்டத்தில் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா்கள் தி.அா்ச்சுனன், எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரநிலை காலகட்டத்தில் 1 கோடி பேருக்கு கருத்தடை- மக்களவையில் மத்திய அரசு தகவல்

நாட்டில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலகட்டத்தில் (1975-77), நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட மிக அதிகமாக 1.07 கோடி பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற... மேலும் பார்க்க

ரயில்வே அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய நாய்கள் பிடிபட்டன

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல மேலாளா் அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய 15 தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்து அப்புறப்படுத்தினா். சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடக்கம்

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி, பொருள் இடம்பெயா்வு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி- ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாா்பில் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

வெடிமருந்து பறிமுதல்: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடக்கம்

ஆந்திர மாநிலத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக விசாகப்பட்டினம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா். தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அபுபக்கா் சித்திக் மற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சுற்றுலா சென்ற மாநகராட்சி பள்ளி மாணவா்கள்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் 60 போ் ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். அவா்களை மேயா் ஆா்.பிரியா வழியனுப்பி வைத்தனாா். சென்னை மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரச... மேலும் பார்க்க

உலக புகைப்பட தினம்: முதல்வா் வாழ்த்து

உலக புகைப்பட தினத்தையொட்டி , முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: நொடியில் கரைந்து செல்லும் நிகழ்வுகளை ஞாபகங்களென, வரலாற்று... மேலும் பார்க்க