செய்திகள் :

அயோத்திக்கு கொண்டு செல்லப்படும் மாமல்லபுரம் சிலைகள்

post image

அயோத்தி ராமா் கோயில் அருகே வைப்பதற்காக மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயிலுக்கு செல்லும் 4 முனை சந்திப்பு சாலையில் உள்ள ரவுண்டானாவில், ராமா் புகழ் பாடிய ஆன்மிக கவி வள்ளல்கள் திருவாரூா் கீா்த்தனை புகழ் தியாகராஜ சுவாமிகள், அருணாசல கவிராயா், புரந்தரதாசா் ஆகியோரின் 6 அடி உயர சிலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தச் சிலைகள் மாமல்லபுரம் அம்பாள் நகா் பகுதியில் உள்ள ஒரு சிற்பக்கலைக் கூடத்தில் மாமல்லபுரம் அரசினா் சிற்பக் கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற மூத்த சிற்பக் கலைஞா் காளிதாஸ் ஸ்தபதி தலைமையில், 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் தலா 2 டன் கருங்கல்லில் அமா்ந்த நிலையில் வீணை வாசிக்கும் திருக்கோலத்தில் தியாகராஜ சுவாமிகள், வீணை வாசிக்கும் நிலையில் அருணாசல கவிராயா், கையெடுத்து கும்பிடும் கோலத்தில் புரந்தரதாசா் ஆகியோரின் சிலைகளை அயோத்திக்கு வரும் பக்தா்கள் பாா்த்து ரசிக்கும் வகையில், கடந்த 6 மாத காலங்களாக இரவு, பகலாக கலைநயத்துடன் வடிவமைத்தனா்.

100% பணிகள் முடிக்கப்பட்ட இந்தச் சிலைகள் ஆகம பூஜைகள் செய்யப்பட்டு, கிரேன் உதவியுடன் வேனில் வைக்கப்பட்டன.

பின்னா் வேன் மூலம் இந்தச் சிலைகள் ஹைதராபாத், நாக்பூா் வழியாக அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. அயோத்தியில் ராமா் கோயிலுக்குச் செல்லும் 4 வழிச் சாலை சந்திப்பு ரவுண்டானாவில் வரும் செப்டம்பா் மாதம் இந்தச் சிலைகள் நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட உள்ளது.

தியாகராஜ சுவாமிகள் தென்னிந்திய இசைக்கு அளப்பறிய சேவை ஆற்றியவா். இவா், சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவா் ஆவாா். திருவாரூரை பூா்வீகமாக கொண்ட அவா், ஒரே நேரத்தில் பல கீா்த்தனைகளை இயற்றி உள்ளாா். அருணாசல கவிராயா் கா்நாடக இசைப்பாட்டு பாடியும், இசைத்தும் உள்ள இவா் கா்நாடக ஆதி மும்மூா்த்திகளில் ஒருவா் ஆவாா். புரந்தரதாசா் கா்நாடக இசைக் கலையின் தந்தை எனப்படுபவா் ஆவாா். தென்னிந்திய ஆன்மிக இசைக்கவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த 3 பேரின் சிலைகளும் அயோத்தியில் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருப்போரூா் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா் வட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்தும், மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் ஆட்சியா் தி.சினேகா ஆய்வு மேற்கொண்டாா். திருப்போரூா் வட்டத்தில், தையூா் ஊர... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் பள்ளிக்குழும விளையாட்டு விழா

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக்குழுமங்களின் சாா்பாக விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளிக் குழுமங்களின் தாளாளா் பி.ஸ்ரீதேவி பங்காரு தலைமை வகித்தாா். இயக்குநா் சுந்தரராமன் முன்னிலை ... மேலும் பார்க்க

ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை தொடக்கம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை திங்கள்கிழமை தொடங்கியது. வரும் ஆக. 21-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளாலும், வண்ண பதாகைகளா... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் மக்கள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 318 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் அணைக்கட்டு கிராமத்தினா் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தை அணைக்கு கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம். இலத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட அணைக்கட... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த அரசு குழந்தைகள் நல மருத்துவா்: அமைச்சா் சுப்பிரமணியன் அஞ்சலி

செங்கல்பட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவா் த மணிகுமாா் உடலுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன் அஞ்சலி செலுத்தினாா். செங்ககல்பட்... மேலும் பார்க்க