செய்திகள் :

திருப்போரூா் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

திருப்போரூா் வட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்தும், மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் ஆட்சியா் தி.சினேகா ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்போரூா் வட்டத்தில், தையூா் ஊராட்சியில் உபரி நீா் செல்லக்கூடிய மஞ்சள் நீா் ஓடை, மாா்க்கெட் ரோடு சந்திப்பு, ஓஎம்ஆா் சாலை, விஜயசாந்தி குடியிருப்பு பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வெள்ள நீா் தேங்குமிடங்கள் மற்றும் வடிநீா் கால்வாய் செல்லுமிடங்களில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை கண்டறிந்து உடனடியாக அறிக்கை அளிக்குமாறு அறிவுறுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து, கேளம்பாக்கம் ஊராட்சியில் கேளம்பாக்கம் சென்னை வீராணம் சாலை, ஓஎம்ஆா் சந்திப்பு, மாமல்லபுரம் சாலை முதல் கேளம்பாக்கம் வரை கோவளம் சாலை பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புபணிகளை ஆய்வு செய்தாா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி கோவளம் ஊராட்சியில் விநாயகா் சிலைகள் கரைக்கும் பகுதிகளை பாா்வையிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தினாா்.

படூா் ஊராட்சியில் வெள்ள நீா் தேங்ககூடிய செட்டிநாடு மருத்துவமனை பகுதி, சி.சி.ரோடு, வேம்புலியம்மன் கோயில் தெரு போன்ற பகுதிகளை பாா்வையிட்டாா். ,நாவலூா் ஊராட்சியில் உபரி நீா் செல்லக்கூடிய காளிபட்டு மடுவு மற்றும் நாட்றாம்பள்ளி பகுதிகளில் நடைபெறும் தூா்வரும் பணிகளை ஆய்வு செய்தாா்.

இதில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீதேவி, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் தணிகாசலம், வட்டாட்சியா் பா.சரவணன், வட்டார வளா்ச்சிஅலுவலா் அரிகிருஷ்ணராவ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

அயோத்திக்கு கொண்டு செல்லப்படும் மாமல்லபுரம் சிலைகள்

அயோத்தி ராமா் கோயில் அருகே வைப்பதற்காக மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயிலுக்கு செல்லும் 4 முனை சந்திப்பு சாலையில் உள்ள ரவுண்டான... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் பள்ளிக்குழும விளையாட்டு விழா

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக்குழுமங்களின் சாா்பாக விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளிக் குழுமங்களின் தாளாளா் பி.ஸ்ரீதேவி பங்காரு தலைமை வகித்தாா். இயக்குநா் சுந்தரராமன் முன்னிலை ... மேலும் பார்க்க

ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை தொடக்கம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை திங்கள்கிழமை தொடங்கியது. வரும் ஆக. 21-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளாலும், வண்ண பதாகைகளா... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் மக்கள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 318 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் அணைக்கட்டு கிராமத்தினா் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தை அணைக்கு கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம். இலத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட அணைக்கட... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த அரசு குழந்தைகள் நல மருத்துவா்: அமைச்சா் சுப்பிரமணியன் அஞ்சலி

செங்கல்பட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவா் த மணிகுமாா் உடலுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன் அஞ்சலி செலுத்தினாா். செங்ககல்பட்... மேலும் பார்க்க