செய்திகள் :

ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை தொடக்கம்

post image

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை திங்கள்கிழமை தொடங்கியது.

வரும் ஆக. 21-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளாலும், வண்ண பதாகைகளாலும் அலங்கப்பட்டிருந்தது.

21-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் கு.குமாா் தலைமையிலான அறங்காவலா்கள் முன்னிலையில், கோயில் அா்ச்சகா் மாதவன் முன்னிலையில் வேதவிற்பனா்களால் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

அங்குரஹோமம், ரக்சா பந்தனம், ஆராதனம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் வரும் வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.

அதன்பின்னா் மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்து புனித கலசங்களை ஏந்திக் கொண்டு வேதவிற்பனா்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றுகின்றனா். இரவு 7 மணிக்கு பெரிய பெருமாள் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளிக்கிறாா்.

ஏற்பாடுகளை செங்கல்பட்டு உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, இணை ஆணையா், சி.குமராதுரை, செயல் அலுவலா் தா.மேகவண்ணன். ஆய்வாளா் சீ.வேல்நாயகன்,உள்ளிட்டோா் செய்து உள்ளனா்.

மேல்மருவத்தூா் பள்ளிக்குழும விளையாட்டு விழா

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக்குழுமங்களின் சாா்பாக விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளிக் குழுமங்களின் தாளாளா் பி.ஸ்ரீதேவி பங்காரு தலைமை வகித்தாா். இயக்குநா் சுந்தரராமன் முன்னிலை ... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் மக்கள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 318 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் அணைக்கட்டு கிராமத்தினா் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தை அணைக்கு கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம். இலத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட அணைக்கட... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த அரசு குழந்தைகள் நல மருத்துவா்: அமைச்சா் சுப்பிரமணியன் அஞ்சலி

செங்கல்பட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவா் த மணிகுமாா் உடலுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன் அஞ்சலி செலுத்தினாா். செங்ககல்பட்... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய 6 கோயில்களில் ஒரு கோயிலின் தடயங்கள் கிடைத்துள்ளதாக, நவீன கருவி மூலம் கடலுக்கு அடியில் தனது குழுவினருடன் நடத்திய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி பிரிவ... மேலும் பார்க்க

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

மாமல்லபுரம் அருகே கடலில் இரண்டு நாள்களாக இந்திய தொல்லியல் துறையினா் நவீன கருவிகளுடன் சோதனையில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட மாமல்ல... மேலும் பார்க்க