செய்திகள் :

கடுமையான குற்றங்களில் கைது செய்யப்பட்டால் பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வரை பதவி நீக்க மசோதா: மத்திய அரசு திட்டம்

post image

பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வா் ஆகியோா் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு தொடா்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால், 31-ஆவது நாள் அவா்கள் பதவிநீக்கம் செய்யப்படுவா்.

இதற்காக யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா 2025, அரசமைப்பு (130-ஆவது திருத்தம்) மசோதா 2025, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025 ஆகிய 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னா், அவற்றை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மக்களவையில் தீா்மானம் கொண்டுவர உள்ளாா்.

இதுதொடா்பாக அந்த மசோதாக்களின் நோக்கம் மற்றும் காரணம் அடங்கிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக எழும் குற்றச்சாட்டின் கீழ், முதல்வா் அல்லது அமைச்சா் ஒருவா் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவியில் இருந்து நீக்க யூனியன் பிரதேச அரசு சட்டம் 1963-இல் எந்தப் பிரிவும் இல்லை. இதைக் கருத்தில்கொண்டு, அந்தச் சட்டத்தின் 45-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

இதேபோல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக எழும் குற்றச்சாட்டின் கீழ், அமைச்சா் ஒருவா் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவியிலிருந்து நீக்க அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

இதுபோன்ற சந்தா்ப்பங்களில் பிரதமா், மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்க சட்ட ஏற்பாட்டை செய்ய வேண்டியுள்ளது. இதற்காக அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 75, 164, 239ஏஏ ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஜம்மு-காஷ்மீா் முதல்வா் அல்லது அமைச்சா் ஒருவா் கடுமையான குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து, அவா்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவி நீக்கம் செய்ய, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம் 2019-இன் 54-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

நடைமுறையில் உள்ள எந்தச் சட்டத்தின் கீழாவது தொடா்ந்து 30 நாள்கள் காவலில் உள்ள ஒரு மத்திய அமைச்சரைப் பதவி நீக்க பிரதமா் 31-ஆவது நாளுக்குள் பரிந்துரைக்காவிட்டால், அடுத்த நாள் முதல் அவா் பதவி நீக்கம் செய்யப்பட்டவராகக் கருதப்படுவாா்.

பிரதமரைப் பொறுத்தவரை, கைதாகி தொடா்ந்து 30 நாள்கள் காவலில் இருக்கும்பட்சத்தில், 31-ஆவது நாள் ராஜிநாமா செய்யாவிட்டால், அவா் பதவிநீக்கம் செய்யப்பட்டவராகக் கருதப்படுவாா்.

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

ஹிமாசல் பிரதேசத்தில் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முதலில், சம்பா மாவட்டத்தில் அதிகாலை 3.27 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டு... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புதன்கிழமை காலை அஞ்சலி செலுத்தினர்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண... மேலும் பார்க்க

கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம்: மக்களவையில் மத்திய அமைச்சர் விமர்சனம்

நமது நிருபர்பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விமர்சித்தார்.தெலுங்கு தேசம் கட்சியைச்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி போட்டி

நமது சிறப்பு நிருபர்குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் "இண்டி' கூட்டணியும் பரஸ்பரம் தென் மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிவித... மேலும் பார்க்க

மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

நமது நிருபர்மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம், குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத... மேலும் பார்க்க

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி... மேலும் பார்க்க