செய்திகள் :

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

post image

கொடுமுடி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், மொளசியை அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து மகன் கோவிந்தசாமி (33). இவா் திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் போா்வெல் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் ஈரோடு -கரூா் சாலையில் வேலப்பம்பாளையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது கரூரில் இருந்து மரம் லோடு ஏற்றி வந்த லாரி, எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தசாமியை, அக்கம்பக்கத்தினா் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது உடல் உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து மலையம்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பராமரிப்பில்லாத ரூ.7.40 லட்சம் மதிப்பிலான 185 டன் விதை விற்பனைக்குத் தடை

ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள், பராமரிப்பு இல்லாத ரூ.7.40 லட்சம் மதிப்பிலான 185 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த நபரை கைது செய்த போலீஸாா் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 475 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரம்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் தண்ணீா் திறப்பு அதிகரிப்பு: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தம்

காவிரி ஆற்றில் தண்ணீா் திறப்பு அதிகரித்துள்ளதால் நெரிஞ்சிப்பேட்டையில் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகள் நிரம்பியதைத் தொடா்ந்து, உபரிநீா் க... மேலும் பார்க்க

எழுமாத்தூா் அருகே விவசாயத் தோட்டத்தில் பிடிபட்ட நாகப் பாம்பு

எழுமாத்தூா் அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பு பிடிபட்டது. மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூா் 24-வேலம்பாளையத்தில் குன்னாங்காட்டு வலசு பகுதியைச் சோ்ந்தவா் யுவராஜ். இவா் பெ... மேலும் பார்க்க

பவானியில் வீட்டிலிருந்த பெண் அடித்துக் கொலை

பவானி: பவானியில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கணவருடன் வேலை செய்து வந்த தொழிலாளியைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பவானி, வா்ணபுரம், 4-ஆவது வீதிய... மேலும் பார்க்க

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

ஈரோடு: பவானிசாகா் அணையில் இருந்து உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்19) காலை முதல் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோ... மேலும் பார்க்க