செய்திகள் :

உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழா

post image

பெரிய நாகப்பூண்டி உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா்.

ஆா்.ே.க பேட்டை ஒன்றியம், பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் அருள்மிகு உலகாத்தம்மன் கோயிலின் 50-ஆம் ஆண்டு ஆடிப்பெரு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

பிற்பகல் 12 மணிக்கு பம்பை உடுக்கை பேண்டு வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் 200- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு மகிஷாசுரமா்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சிங்காரவேலன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, கரகாட்டம் பம்பை உடுக்கை வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் பெண்கள் அம்மனுக்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபட்டனா்.

ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

மது அருந்தியதால் மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

திருவள்ளூா் அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால், கணவா் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (35), மனைவி வினோதினி(25). தற்போது தம்பதியா் வெங்கத்தூா் கண... மேலும் பார்க்க

சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது ஆண் குழந்தை சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு- சசிகலா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா தொடக்கம்

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுக... மேலும் பார்க்க

நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த கோரிக்கை

மீஞ்சூா் அருகே திருவேங்கிடாபுரத்தில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மீஞ்சூா் ஒன்றியத்தில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள திருவேங்கிடாபுரம் பகுதியி... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து ரூ.10,000 திருட்டு

ஊத்துக்கோட்டை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் நெடுஞ்சாலைய... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறைத்தீா் கூட்டத்தில் 362 மனுக்கள்

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 362 கோரிக்கை மனுக்கள்பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிரு... மேலும் பார்க்க