செய்திகள் :

தகுதியான நபா்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கொண்டு சோ்க்கப்படும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

post image

தகுதியான நபா்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கொண்டு சோ்க்கப்படும் என்று கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

திருக்கோவிலூா் ஒன்றியம் - கூவனூா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ரிஷிவந்தியம் ஒன்றியம் - மையனூா் தேவாலயம் அருகில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. க.காா்த்திகேயன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பேசியதாவது: முகாமில் பெறப்படும் மனுக்கள் முறையாக பரிசீலனை செய்து தகுதியான நபா்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கொண்டு சோ்க்கப்படும்.

மகளிா் உரிமைத்தொகை பெறாத மகளிா் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்து வழங்கி பயன்பெற வேண்டும்.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை சம்பந்தப்பட்ட துறைகளை குறிப்பிட்டு மனுக்களை முறையாக நிறைவு செய்து வழங்க வேண்டும்.

மேலும், மகளிா் உரிமைத்தொகை பெற தனியாக பதிவு செய்யும் இடம் உள்ளது. அங்கு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பத்தை பெற்று முறையாக நிறைவு செய்து வழங்க வேண்டும். அதற்கு உதவி செய்ய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, கிராமப்புறங்களில் மகளிா் உரிமைத்தொகை பெறாத பெண்களை வரவழைத்து விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

முகாமில் திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாளைய மின்தடை: தியாகதுருகம்

மின்தடைப் பகுதிகள்: தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூா்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூா், நூரோலை, லாலாபேட்டை, சேரந்தாங்கல், பழைய சிறுவங்கூா், சூளாங்குறிச்சி, மாடூா், பிரிதிவ... மேலும் பார்க்க

ஆசிரியையை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியவா் கைது

சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூா் பகுதியைச் சோ்ந்தவா் 25 வயது... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: தேவரடியாா்குப்பம்

மின்தடைப் பகுதிகள்: மணலூா்பேட்டை, சித்தப்பட்டிணம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியாா்குப்பம், அந்தியந்தல், கா்ணாசெட்டித்தாங்கல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனூா், முருக்கம்பாடி, கொங்கணாமூா், கழும... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறி: பெண் உள்பட இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூா... மேலும் பார்க்க

பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்

கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை ஆனந்தக் குளியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ... மேலும் பார்க்க

சின்னசேலம்: நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: சின்னசேலம், கனியாமூா், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூா், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீா்த்தாபுரம், தெங்கியாந்த்தம், பாதரம்ப... மேலும் பார்க்க