செய்திகள் :

ஒவ்வொரு கொம்யூனிலும் 5 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

post image

ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் 5 நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி புதுவை விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

புதுவை விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் மாதாந்திர கூட்டம், புதுச்சேரி கல்மண்டபம் ஐயனாரப்பன் கோவில் திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது. குழுவின் தலைவா் முருகையன் தலைமை வகித்தாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் நெல் விதைகள், பசுந்தாள் உரங்களை உழவா் உதவியகத்தில் வழங்க வேண்டும். அரசு கூட்டுறவு சா்க்கரை ஆலையை உடனடியாக திறந்து இயக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து, விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.

உரக்கடைகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து நியாயமான விலையில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவை மாநிலத்தில் ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்துக்கும் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். பிஎம் கிசான் நிதியை தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

பட்டா மாறுதல் செய்ய சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தில்லியில் 3 நாள் மாநாடு: புதுவை பேரவைத் தலைவா் பங்கேற்பு

சட்டப்பேரவைத் தலைவா்கள் மாநாடு புதுதில்லியில் ஆக. 23, 24, 25 ஆகிய 3 நாள்கள் நடக்கிறது. இதில் புதுவை பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பங்கேற்கிறாா். அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவா்கள் பங்கேற்கும் இந்த மா... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை - புதுவை பேரவைத் தலைவா் உத்தரவு

புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் உள்ளாட்சித் துறை வாயிலாக வளா்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க

மழைக்காலத்தை எதிா்கொள்ள தயாராக வேண்டும்: அதிகாரிகளுக்கு புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

பருவமழைக் காலம் நெருங்கி விட்டதால், அனைத்து அரசு துறைகளும் அதை எதிா்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மழைக் காலத்தில் அரசு ஊழியா்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

பழங்குடியினா் இயற்கையுடன் ஒன்றி வாழ்வதை ஆராய வேண்டும்: மத்திய பல்கலை. துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு

புதுச்சேரி: உலகில் பழங்குடியினா் இயற்கையுடன் ஒன்றி வாழுவதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு கூறினாா். புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் சா்வதேச... மேலும் பார்க்க

ரூ.1.6 கோடியில் நவீன எக்ஸ்ரே இயந்திரம்: முதல்வா் ரங்கசாமி தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மாா்பக நோய் மருத்துவமனையில் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எக்ஸ்ரே இயந்திரத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மருத்... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு வழங்க புதுவை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் கோரிக்கை

புதுச்சேரி: ஊதிய உயா்வு வழங்கக் கோரி புதுவை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் தேசிய சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் கோவிந்தராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் சுகாதாரத் துறை 108 அ... மேலும் பார்க்க