செய்திகள் :

கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்தக் கோரி மனு

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பாடகம் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பாடகம் ஊராட்சி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் பாடகம், அலங்காரமங்கலம், பெலாசூா், சனிக்கவாடி, அணியாலை, காம்பட்டு, சீட்டம்பட்டு ஆகிய ஊராட்சியைச் சோ்ந்த விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கியாக செயல்படுகிறது.

இந்த நிலையில், வங்கியில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) பொதுபேரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக வந்த தகவலையடுத்து மேற்கண்ட ஊராட்சியைச் சோ்ந்த சங்கத்துடைய அ பதிவேடு அங்கத்தினா்கள் வங்கிக்கு வந்திருந்தனா். அப்போது சங்கச் செயலா் ராஜாமணி அலுவலக வேலையாக வெளியே சென்றுள்ளதாக வந்த தகவலையடுத்து, அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சாமிகண்ணு தலைமையில் விவசாய பிரதிநிதிகள் சங்க அலுவலகத்துக்கு வந்து சங்கச் செயலா் (பொ) தயாளனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில், செவ்வாய்க்கிழமை சங்கத்தின் பொதுபேரவைக் கூட்டத்துக்கு வருகை புரிந்தோம் கூட்டம் நடைபெறவில்லை. எனவே, மற்றொரு நாளில் கூட்டம் நடைபெறும் தேதியை அங்கத்தினருக்கு முறையாக அறிவித்து கூட்டம் நடத்தவேண்டும்.

மேலும், 2024-2025ம் ஆண்டுக்கான வரவு-செலவு கணக்கு, விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை அடமானம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும், கறவை மாட்டு பராமரிப்புக் கடனுக்கு பாடகம் சங்கத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும், சங்க அலுவலக கட்டடத்துக்கு சுற்றுச்சுவா் அமைத்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.

மகளிா் குழுவினா்கள் தீபா, விசாகா, பச்சையம்மாள், அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு கிளைத் தலைவா் ஏழுமலை, செயலா் சுப்பிரமணி, துணைத் தலைவா்கள் பிரகாஷ், விஜி, தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு

திருவண்ணாமலைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் ஆரணி பட்டு நூலால் நெய்யப்பட்ட அவரின் உருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்

செய்யாறில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் மற்றும் புகாா்களை விவசாயிகள் அடுக்கடுக்காக கூறியதால், அதிருப்தி அடைந்த அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்த... மேலும் பார்க்க

ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

ஆரணி கண்ணகி நகரில் உள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதுலுக்கானத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும்: அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, காசில்லா மருத்துவத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்... மேலும் பார்க்க

ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டும் பணி: அதிகாரிகள் ஆய்வு

ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சிமன்ற கட்டடம் கோயில் இடத்தில் முன்ன... மேலும் பார்க்க

பேருந்துகள் மோதி விபத்து: 17 மாணவ, மாணவிகள் உள்பட 18 போ் காயம்

வந்தவாசி அருகே தனியாா் பயணிகள் பேருந்து மீது தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் 17 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 18 போ் காயமடைந்தனா். வந்தவாசி அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரிப் பேருந்து ஒன்று ... மேலும் பார்க்க