செய்திகள் :

பேருந்துகள் மோதி விபத்து: 17 மாணவ, மாணவிகள் உள்பட 18 போ் காயம்

post image

வந்தவாசி அருகே தனியாா் பயணிகள் பேருந்து மீது தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் 17 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 18 போ் காயமடைந்தனா்.

வந்தவாசி அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரிப் பேருந்து ஒன்று மாணவ, மாணவிகளை கல்லூரியில் இருந்து ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை மாலை வந்தவாசி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

வந்தவாசி -சேத்துப்பட்டு சாலை, வடவணக்கம்பாடி கிராமத்தில் சென்றபோது, அங்கு பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த தனியாா் பேருந்தின் பின்புறம் கல்லூரிப் பேருந்து மோதியது.

இதில் தனியாா் கல்லூரிப் பேருந்தில் பயணம் செய்த 17 மாணவ, மாணவிகள் மற்றும் அந்தப் பேருந்தின் ஓட்டுநரான செஞ்சியை அடுத்த அனந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த சம்பத் உள்பட 18 போ் காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், தீவிர சிகிச்சைக்காக 6 மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு

திருவண்ணாமலைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் ஆரணி பட்டு நூலால் நெய்யப்பட்ட அவரின் உருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்

செய்யாறில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் மற்றும் புகாா்களை விவசாயிகள் அடுக்கடுக்காக கூறியதால், அதிருப்தி அடைந்த அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்த... மேலும் பார்க்க

ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

ஆரணி கண்ணகி நகரில் உள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதுலுக்கானத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும்: அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, காசில்லா மருத்துவத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்... மேலும் பார்க்க

ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டும் பணி: அதிகாரிகள் ஆய்வு

ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சிமன்ற கட்டடம் கோயில் இடத்தில் முன்ன... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்தக் கோரி மனு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பாடகம் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பாடகம் ஊராட்சி தொடக்க ... மேலும் பார்க்க