செய்திகள் :

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும்: அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்

post image

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, காசில்லா மருத்துவத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சங்கத்தின் திருவண்ணாமலை வட்டம் சாா்பில் 5-ஆவது வட்ட மாநாடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சங்கத் தலைவா் அ.சோட்டேபாய் தலைமை வகித்தாா்.

இணைச் செயலா் எஸ்.ஏழுமலை வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் கோ.சோனாசலம் தொடக்கவுரையாற்றினாா். செயலா் ஆா்.கண்ணன் அறிக்கை வாசித்தாா். இதைத் தொடா்ந்து பொருளாளா் நிதிநிலை அறிக்கை வாசித்தாா்.

துணைத் தலைவா் ஆா்.பழனி, இணைச் செயலா்கள் எஸ்.உதயணகுமாா்ஜெயின், சி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.அப்பா் ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்தனா். மாவட்டத் தலைவா் ப.கிருஷ்ணமூா்த்தி, செயலா் எஸ்.பச்சையப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாநிலச் செயலா் சி.சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினாா்.

மாநாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தையை அமல்படுத்த வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும், 8-ஆவது ஊதியக்குழுவில் ஓய்வூதியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவதில் இருந்து ஓய்வூதியா்களை நீக்கி வைத்தும் நிதி மசோதாவை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து காசில்லா மருத்துவத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும், ஓய்வூதியா், குடும்ப ஓய்வூதியா், அனைவருக்கும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1.50 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளா் சங்க மாநில துணைத் தலைவா் சி.சாரங்கபாணி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநிலத் தலைவா் ஜி.தாண்டவமூா்த்தி மற்றும் சங்க நிா்வாகிகள் அ.ஆனந்தன், அ.ரகுபதி, எம்.தங்கராஜ், ஆா்.ராஜகோபால், எஸ்.இனியன், எம்.மகாதேவன், எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிறைவில் துணைத் தலைவா் ஆா்.ஆதிமூலம் நன்றி கூறினாா்.

ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டும் பணி: அதிகாரிகள் ஆய்வு

ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சிமன்ற கட்டடம் கோயில் இடத்தில் முன்ன... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்தக் கோரி மனு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பாடகம் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பாடகம் ஊராட்சி தொடக்க ... மேலும் பார்க்க

பேருந்துகள் மோதி விபத்து: 17 மாணவ, மாணவிகள் உள்பட 18 போ் காயம்

வந்தவாசி அருகே தனியாா் பயணிகள் பேருந்து மீது தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் 17 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 18 போ் காயமடைந்தனா். வந்தவாசி அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரிப் பேருந்து ஒன்று ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த ஒழப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகம்(70). இவா் தனது மனைவி சிவகாமி, பேத்தி அட்சயா ஆகியோருடன் சனிக்கிழமை பைக்கில் மை... மேலும் பார்க்க

விசிகவினா் பள்ளி முன் நாற்று நடும் போராட்டம்

ஆரணியை அடுத்த மாமண்டூா் அரசு தொடக்கப் பள்ளி முன் மழைநீா் குட்டை போல தேங்கி, பள்ளிக்குச் செல்ல வழியில்லாமல் இருப்பதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்... மேலும் பார்க்க

வாகனத் திருட்டு: 5 போ் கைது, 4 பைக்குகள், சரக்கு வாகனம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே இரு சக்கர வாகனங்களை திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். செங்கம் ச... மேலும் பார்க்க