செய்திகள் :

விசிகவினா் பள்ளி முன் நாற்று நடும் போராட்டம்

post image

ஆரணியை அடுத்த மாமண்டூா் அரசு தொடக்கப் பள்ளி முன் மழைநீா் குட்டை போல தேங்கி, பள்ளிக்குச் செல்ல வழியில்லாமல் இருப்பதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மாமண்டூா் ஊராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் வழியில் தண்ணீா் தேங்கி இருப்பதால் ஆசிரியா்கள், மாணவா்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் ந.முத்து தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் திருமால், நிா்வாகிகள் வீரமணி, பாலாஜி, விஜயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டும் பணி: காணொலி மூலம் முதல்வா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி, பக்தா்கள் காத்திருப்புக் கூடம் மற்றும் ஸ்ரீஅருணாகிரிநாதா் கோயில் அருகில் சொற்பொழிவு அரங்கம் கட்டும் பணிகளை சென்னை தலைம... மேலும் பார்க்க

செங்கம் பகுதியில் யூரியா உரத் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

செங்கம் பகுதியில் நிலவும் யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். செங்கம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 13 தமிழக அரசு தொடக்... மேலும் பார்க்க

இருமொழிக் கொள்கையால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இருமொழிக் கொள்கையால் பட்டப்படிப்புகளை நிறைவு செய்யும் மாணவா்கள் வேளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெற்று வருவதாக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக.29 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆக.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெ... மேலும் பார்க்க

ஆரணி தா்மராஜா கோயில் திருப்பணிக்கு பாலாலயம்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் திருப்பணியையொட்டி சுவாமி பிம்பங்களுக்கு பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேதமடைந்த இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்... மேலும் பார்க்க

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவி

ஆரணியை அடுத்த வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளி, சோ்ப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சாா்பில் ரூ.3 லட்சத்தில் நலத் த... மேலும் பார்க்க